Monday, 29 July 2013


தோழியின்  தோழியிடமிருந்து பகிந்து கொண்ட விஷயம் ........சம்பந்தப்பட்ட இருவரின் நலம் கருதி பெயரும் ,ஊரும் வெளியிட வில்லை,அந்த ஆணும் பெண்ணும் முதலில் பள்ளியில் அறிமுகமாகி ,நட்பாகி பின்பு அது காதல் ஆனது ,காதல் கல்லூரி ,வேலை என்று இருவரும் இடம் மாறிய பின்பும் தொடர்ந்தது ,இரண்டு பேரின் வீட்டார் மட்டுமல்ல அவர்கள் இருந்த ஊருக்கே தெரியும் அவர்கள் இருவர் காதலிப்பதும் ,மனம் முடித்துக் கொள்ளப் போவதும்,..12 வருடங்கள் நன்கு பழகிய ,புரிந்த காதல் ,இருவரும் ஒருவழியாக தம் தம் வேலையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் மனம் முடிக்க நினைத்து ,அனைத்து ஏற்பாடுகளும் செய்து ,திருமண நாளும் வந்தது ,மணமகள் மேடையில் காத்திருக்க மணமகனைக் காணவில்லை ,அனைவரும் தேடி ஒருவழியாக மாலை நேரம் அவரை அவரது அலுவக கழிப்பறையில் ஒளிந்திருந்ததைக் கண்டு பிடித்தார்கள் ,காரணம் கேட்டதற்கு "என் அம்மாவிற்கு பெண்ணைப் பிடிக்கவில்லை ,அதனால் எனக்கு இந்தப் பெண்ணோடு கல்யாணம் வேண்டாம் "தோழி செய்தி கேட்டு நிலை குலைந்து போயிருந்தார் சில காலம் ,பின்பு தேறி தற்போது மிக தொலைவான நாட்டில் மிகப் பெரிய பதவியில் இருக்கிறார் ,திருமணம் செய்து கொள்ளவில்லை ,வயதும் கடந்து விட்டது ,அவரோ அவர் அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ,அந்த பெண்ணோ 2 வருடங்கள் கழித்து இவரைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விவாகரத்து பெற்றுக் கொண்டார் ,வேறு யாரும் இவருக்கு பெண்ண தர மறுத்ததால் அவர் அம்மாவோடு தனியாக வசிக்கிறார் அதே ஊரில் ....####இந்த நிகழ்வைக் கட்ட பின்பு எனக்குத் தோன்றியது "தெய்வம் நின்று கொல்லும் "என்பது இது தானோ ???

No comments:

Post a Comment