Monday 16 September 2013

ஆவிகள்----உண்டு,இல்லை என்று பல்வேறு ஆய்வுகள் ,முடிவுகள் என்று வெளி வந்து கொண்டு இருந்தாலும் சில நேரங்களில் சில தாங்க முடியாத கொடுமையான நிகழ்வுகளைப் பார்க்கும் போது,படிக்கும் போது உண்மையாக அப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமோ என்று நான் நினைப்பது உண்டு .....போன வெள்ளியன்று 13ம் தேதி ஒருவரது நேரடி அனுபவம் கேட்ட போது ஒவ்வொரு மறைந்த உயிர் மீதும் பயம் போய்,மதிப்பும் மரியாதையும்,பக்தியும் வந்து விட்டது எனலாம் ....அந்த நபர்,வயது 28 ,இந்தியாவில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்,அவர் இங்கு வந்த புதிது அப்போது அவர் வயது 25,தன் மேலதிகாரி ஒரு சீனர்,இந்த நபர் இங்கு கட்டிட வேலைக்கு வந்து இருப்பவர்வந்த புதிது என்பதால் இவருக்கு வேலை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு அந்த உயர் சீன அதிகாரி வசம்,இவரோடு மிக நன்றாக பழகுவராம்ஒரு நாள் இவரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அவருக்கு பஜ்ஜியும்,டீஉம் வாங்கிக் கொண்டு ,இந்த பையனையும் சாப்பிட்டு விட்டு வரச்  சொல்லி இருக்கிறார் ,ஐவரும் அவ்வாறு ரொட்டி சாப்பிட்டு விட்டு ,அவருக்கும் பஜ்ஜியும்,டீயும் வாங்கிக் கொண்டு வந்து கொண்டு இருந்து இருக்கிறார்,அந்த அதிகாரி இவர் வருவதைப் பார்த்து விட்டு எழுந்து வேலை செய்யும் இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு அங்கு வேலை செய்யும் ஆட்களை எண்ணிக் கொண்டு இருந்து இருக்கிறார் அப்போது திடீரென்று அவர் நின்று கொண்டு இருந்த இடத்தின் மணல் சரிந்து அவர் கீழே விழ ஆரம்பித்து இருக்கிறார் ,இந்த பையன் அந்த இடத்திற்கு ஓடி போகும் முன்னே அவர் கிடுகிடுவென்று கீழே போய் அவர் தலை வேறு உடல் வேறு என்று பிரிந்து விட்டதாம்,இந்த பையன் கை,கால் நடுங்க ஆரம்பித்து பின் ஒரு வழியாக அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு அன்று  இரவு,இந்த பையனால் தூங்க முடியவில்லை ஒரு வழியாக தூங்க முற்பட்ட போது அந்த அதிகாரி இவரிடம் வந்து கேட்டு இருக்கிறார் "எனக்கு பஜ்ஜியும்,டீயும் வாங்கி வந்தாயா?நீ சாப்பிட்டாயா?"அன்று முதல் இன்று வரை அந்த பையன் எது வாங்கி சாப்பிட்டாலும் அந்த அவர் உட்கார்ந்து இருந்த மரம் பக்கத்தில் கொஞ்சம் பகிர்ந்து வைத்து விட்டு தான் சாப்பிடுவாராம்,இவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து இவர் புலம்பும் போது அவர் சொல்வாரம்"டோன்ட் வொர்ரி "எல்லோரும் மிகவும் ஆச்சரியமாக கேட்பார்களாம் யாரிடம் பேசுகிறாய் என்று ?அவரிடம் சொல்லிய பிறகு இவரது பிரச்சனை கொஞ்சம் தீர்வு கிடைப்பது போல் ஒரு தெம்பு இவருக்கு வருமாம் ...உண்மையில் ஆவிகள் உண்டுங்க என்று அவர் சொன்ன போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.......ஆனந்த புரத்து வீடு  ..படம் உண்மை தான் போல......

Sunday 8 September 2013

எனக்கு கொஞ்சம் நெருக்கமான ஊடகத்  துறையில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் தோழி பகிர்ந்து கொண்டது போன வாரம் காலை நான் சாலையைக் கடக்க முற்பட்ட போது ஒரு பாட்டியும் என்னோடு வந்தார் ,அவரை அவரது முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வரும் போது அவர் சொன்னது "எனக்கு 8 பிள்ளைகள்,எல்லோரும்வேலைசெய்கிறார்கள்,அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது,பேரக் குழந்தைகளும் உண்டு,என்ன காரணமோ?இங்கு வந்து என்னை சேர்த்து விட்ட நாள் முதல் யாரும் என்னைப் பார்க்க வரவில்லை,இங்குள்ள சூழ்நிலை தெரியும்,வேலைப் பளு என்று எனக்கு ஒரு உதவி செய் ,தயவு செய்து யாராவது ஒருவரை எனக்கு போனிலாவது அழைத்து பேசும்படி சொல் பெண்ணே என்று சொல்லி தன் பெயர் சொன்னார்"அவருக்கு பிள்ளைகள் பெயர்கள் மட்டும் தான் தெரிகிறது அவர்கள் வேலை பார்க்கும்  இடமோ,,தொலை பேசி எண்ணோ தெரியவில்லை  மிகவும் பரிதாபமாக இருந்தது பிறகு நான் அந்த இல்லத்தின் தொலை பேசி எண்களை வாங்கி வைத்துக் கொண்டேன்,பாட்டி நான் உங்களோடு பேசுகிறேன்,என்னால் முடிந்த போது வந்து பார்க்கிறேன் என்று சொல்லி வந்தேன் என்றாள்,"நாம் தான் எவ்வளவு கொடூரமாக மாறி வருகிறோம் ,பணத்திற்காக வீட்டை பெற்றோருக்கு தெரியாமல் விற்று விட்டு ,அவர்களை கொஞ்ச நாள் இங்கு இருங்கள் என்று சொல்லி ஏமாற்றி முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு நாட்டை விட்டு சென்று விடுவதும், உள்ளூரில் இருந்து கொண்டு தங்கிப் பற்றி தவறான தகவல்களைக் கொடுப்பது என்று புலம்பித் தீர்த்து விட்டாள்,"எனக்கும் கூட ஒரு அனுபவம் உண்டு மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் ரயிலில் செல்ல நேர்ந்த போது,திருச்சியில் அந்த 50 களில் இருந்த அந்த பெண்ணைப் பார்த்தோம்,ஒவ்வொரு பெட்டியாக ஏறி யாரையோ தேடுவது போல் தேடினார்,,கையில் கரும்பு வைத்து இருந்தார்,சிலரை அடிக்கவும் செய்தார்,மிகவும் பயமாக இருந்தது ஒரு போலீஸ் பின்னால் வந்து எங்களைக் காப்பாற்றினார்,அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது "இப்போது இது போல் நிறைய மனிதர்கள் உண்டும்மா,இங்கு சுற்றுப் பயணம் வருபவர்கள் இது போல் மன நிலை சரியில்லாதவர்களை ,வயதானர்களை,பராமரிக்க முடியாமல் வேண்டுமென்றே இது போல் மொழி தெரியாத இடத்தில் விட்டு விட்டு சென்று விடும் போக்கு அதிகரித்து வருகிறது "என்றார் .....
கணபதி என்னும் களிரினைப் போற்றின்
கவலைகள் நீங்கும் ,காமம் தொலையும்
விநாயகன் என்னும் வீரனை வணங்கின்
வினைகள் தீரும்,வெற்றிகள் விளையும்
ஐய்ங்கான் என்னும் ஐயனை நினைக்கின்
அல்லல்கள் தவிரும் ,அன்பே மலரும்
பிள்ளையார் என்னும் பெயரினை வணங்கின்
பெருமைகள் சேரும்  ,பிணிகள் அகலும்
விநாயகனைத் துதித்துடுவோம்
சகல சௌபாக்கியங்களையும் பெற்றிடுவோம்
குழந்தை முதல் இன்று வரை அனைவருக்கும் (இந்து மதம் தழுவிவர்கள்)சொல்லிக் கொடுக்கப்படும் பட்டிருக்கும் முதல் கடவுள் துதி,அன்று இனம் ,மதம் பாராது அனைவரும் ஒன்று சேர்ந்து மிக ஆர்வமாக களிமண் சேகரித்து,எருக்கம் பூக்கள் சேகரித்து,அருகம் புல் பிடுங்கி என்று மிக ஒற்றுமையாக போட்டி போட்டுக் கொண்டு யார் வீட்டில் மிக அழகிய பிள்ளையார் செய்கிறார்கள்,எவ்வளவு காசு நெற்றி மேல் வைக்கிறார்கள் 5ம் நாள் கழித்து எந்த குளத்தில் போட வேண்டும் .என்றெல்லாம் ஜாதி ,மத பேதம் இன்றி யோசிப்போம்,கொண்டாடுவோம்,எல்லோர் வீடுகளுக்கும்கொழுக்கட்டையும்,பொரியும்,பாயசம்,அவல்,மோதகம் கொடுப்பதில் எங்களுக்குள் மிகப்  பெரிய போட்டி நடக்கும்,,லீவு வேறா கேட்கவே வேண்டாம் பாட்டிகள்,தாத்தாக்கள் அன்று எல்லோருக்கும் பிள்ளையார் பற்றி கதைகள் சொல்வார்கள்,சில வீடுகளில் புதுத் துணிகள் கூட எடுப்பார்கள் கதைகள் கேட்க வரும் குழந்தைகளுக்கு கொடுக்க என்று,மிக அருமையான உண்மையான பிள்ளையார் சதுர்த்தி அப்போது கொண்டாடப் பட்டது ...கண்டிப்பாக பிள்ளையாரும் மிக சந்தோஷமாக இருந்திருப்பார் அன்று எங்களைப் பார்த்து ....இன்று எப்படி இப்படிஎல்லாம் யோசிக்க முடிகிறது,வர்ணம் பூச முடிகிறது?இனம் பிரிக்க முடிகிறது?ஒவ்வொரு தெரு வாரியாக ஒவ்வொரு உயரத்தில்,நிறத்தில் வடிவத்தில் அனைத்தையும் பார்க்கையில் பக்தி போய் நெஞ்சில் ..பயம் வருகிறது,போன 4 வருடங்களுக்கு முன் இந்த பண்டிகை அன்று நான் அங்கு இருந்த போதுஎங்கும் ஒருவித இறுக்கம்,அதீத பயம் கலந்த பக்தி நிலவுவது போல் தோன்றியது பிற மதம் சார்ந்த எங்கள் நண்பர்கள் யாரும் அந்த ஊர்வலம் முடிகின்ற  வரையில் வெளியல் வரவில்லை எங்களை சந்திக்க ...எங்களால்  உங்களுக்கு
தொந்தரவு வேண்டாம் தொலைபேசியில் பேசினால் போதும் என்று இருந்துவிட்டார்கள் ,அப்போதைய கிராமத்து பள்ளியில்படிக்கும் போது நடுவில் என்னோடு சேர்ந்த ஒரு பெண் தன் குடும்பம் மும்பை கலவரத்தால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து ஓடி வந்துசேர்ந்த போது இந்த பக்கம் பரவாயில்லை என்று நாங்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொண்டோம்..இன்றோ/???//
எந்தக் கடவுள் இவர்களிடம் சொன்னது இப்படிக் கொண்டாடவென்று?அந்த கடவுள் தான் சொல்ல வேண்டும் இன்றைய தன் பெயரால் நடக்கும் கலவரங்களை,மிகைப்படுத்துதலை நிறுத்த வேண்டி  ..நடக்குமா???உயிரோடு இருக்கும் வரை வேண்டிக் கொள்வோம்........ ...

Thursday 5 September 2013

ஆசிரியர் தினம் -எனக்குத் தெரிந்த சரஸ்வதி டீச்சர்,எங்கள்  ஊரில் அப்போது 10ம் வகுப்பக்கு மேல் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் இல்லை ,பள்ளிக்கு வருவது ஒன்றும் மிக முக்கியமாக யாரும் அங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் ,பள்ளி நேரம் துவங்கும் முன் சரசு டீச்சர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பார்த்து விட்டு குறித்துக் கொள்வார் ,யார் யார் வரவில்லை என்று,பிறகு அந்த பிள்ளைகளின் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று ,பேசி பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வருவார்,பல சமயங்களில் பெற்றோரோடு சண்டை போட்டு அழைத்து வந்திருக்கிறார் ,பிறகு எல்லோரும் வந்த பிறகு சரியாக காலை கொடி வணக்கம் பாட வேண்டும் யார் யார் பாடுகிறார்கள் என்று  கவனிப்பார்,பாடவில்லை என்றால் அடுத்த நாள் அவர்கள் தான் எல்லோர் முன்னும் காலையில் பாடியாக வேண்டும்,இப்படித்தான் தமிழ்த்  தாய் வாழ்த்து,ஆத்திச்சூடி,திருக்குறள்,வாய்ப்பாடு என்று இன்றும் என்னால் மறக்காமல் சொல்ல முடிகிறது,ஒருமுறை ஒரு இரெண்டாம் வகுப்பு படிக்கும் பையனின் புத்தகப்பை பெரியதாக இருந்தது ,சரசு டீச்சர் சந்தேகம் வந்து அந்த பையை சோதித்த போது அதில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து விட்டார் ,பிறகு நேராக அந்த பையன் வீட்டிற்கு சென்று அவன் அப்பாவிடம் "நீ உன் தொழிலுக்காக பிள்ளையின மனதையும்,படிப்பையும் கெடுத்து விடாதே,நான் இந்த முறை போலீசில் சொல்லவில்லை,இனிமேல் பிள்ளையின் பையில் பார்த்தால் கண்டிப்பாக சொல்லிவிடுவேன் என்று மிரட்டி விட்டு வந்தார் ,இத்தனைக்கும் அவன் அப்பா பெரிய ரௌடி ,சரசு டீச்சர் யாருக்கும் எதற்காகவும் பயப் பட மாட்டார் ,"நம்மிடம் தப்பு இல்லாத போது,நாம் தவறு செய்யாத போது நாம் யாருக்கும் பயப் படக் கூடாது என்பது அவருடைய கொள்கை"அதை இறுதி வரை பின்பற்றினார்,மதிய உணவுப் பிரிவு,விளையாட்டு,டான்ஸ்,பாட்டு,மாநில அளவிலான  போட்டி என்று எந்த ஒரு பிரிவிற்கும் அவரை பணிக்கும் போதும் தயங்காமல்,செய்வார்,பிள்ளைகளை உற்சாகப் படுத்தி அவர் இருந்த வரை அவர் வேலை செய்த பள்ளி கண்டிப்பாக பரிசுகளை வென்றுவிடும்படி செய்தவர், முதல் முதலாக தமிழக அரசால் 'நல்லாசிரியர் விருது "அறிமுகப் படுத்திய போது இவருக்கும் கிடைத்தது ,இவர் மறைந்த பிறகு,இன்றும் ஊருக்கு செல்லும் போது,போலீசாக,மிலிடரி ஆபீசராக ,டீச்செராக ,தாதியாக,பஸ் நடத்துனராக,கணினித் துறையில் வேலை செய்பவர் ,வெளி நாட்டில் வேலை செய்பவர் என்று ஜாதி மதம் இனம் பாராது  பலரும்  என்னை அடையாளம் கண்டு கொண்டு சொல்வார்கள் "உங்கள் அம்மா சரசு டீச்சர் இல்லை என்றால்,நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்,அன்று அவர் என் வீட்டுக்கு வந்து என்னை அழ அழ பள்ளிக்கு அழைத்து வந்திருக்க வில்லை என்றால் இன்று என் நிலை என்ன ஆகியிருக்குமோ என்று சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்வார்கள்,அன்று கஞ்சா விற்ற தகப்பனின் மகன் இன்று அதே ஊரில் ஒரு போலீஸ் அதிகாரி ,போன முறை கோவிலுக்கு சென்று இருந்த போது தானாக முன் வந்து அந்த அதிகாரி என்னிடம் சொன்னார்  அப்போது நான் நினைத்துக் கொண்டேன்  என் அம்மாவும் ஏதோ செய்து விட்டுப் போய் இருக்கிறார் என்று ...இன்றும் என் அம்மா போல் கோடி கோடியாய் நேர்மையான ஆசிரியர்கள் உண்டு ,ஒவ்வொரு ஆசிரியைகளும் ஆசிரியர்களும்,ஏதோ ஒரு வகையில் வழியில் யாரரவது ஒருவர் வாழ்விலாவது மாற்றம் செய்து விட்டும்,செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள் அவர்களால் முடிந்த வரையில் .......அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .... .....

Wednesday 4 September 2013

சென்னை விமான நிலையம் ,இரவு 11.50,ரெண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது ,ஒரு கணவன்,மனைவி,ரெண்டு குழந்தைகள் (1 ஆண்,1 பெண் )வயது இருவருக்கும் 9,7 இருக்கும் ,அனைத்து நுழைவாயில் பரிசோதனைகளும் முடித்து வந்தவுடன் பேசி,ஆடி,ஓடித் திரிந்து கொண்டிருந்தனர் இரு பிள்ளைகளும் ,முகத்தில்  அவ்வளவு சந்தோசம் ,முதல் முறையாக விமானப் பயணம் ,இருவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்கள் அம்மாவைத் துளைத்துக் கொண்டிருந்தனர்,அம்மா முகத்தில் சந்தோசம் ஒருவித படபடப்பு இருந்தது ,முதல் முறை விமானப் பயணம் அப்பட்டமாக அந்த நால்வர் முகத்தில் தெரிந்தது ,கணவர் கொஞ்ச நேரம் காண வில்லை பிறகு வந்தார் வந்ததில் இருந்து கொஞ்சம் தள்ளாட்டம் ,நேரம் கடந்தது ஒருவழியாக நாங்கள் செல்லும் விமானத்திற்கு அழைக்கப் பட்டோம்,எல்லோரும் வரிசையில் நிற்கும் போது குழந்தைகள் உள்ளவர்கள் முதலில் வர அழைக்கப் பட்டார்கள்,இந்த குழந்தைகள் இருவரும் வேகமாக ஒடிச் சென்றனர் வரிசையில் ,அங்கும் சிறிது நேரம் ஆனது,உடனே அந்த அப்பா அங்கு இருந்த நபர்களிடம் கத்த ஆரம்பித்து விட்டார்,கத்தல் மிகப் பெரிதாகி அவர் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே தன்னிலை  மறந்து போய் தன் உடைகளை கழற்ற  ,போலீஸ் வரவழைக்கப் பட்டு,அவரை அமைதிப் படுத்த அப்போதும் அவர் போலீசாரோடு சத்தம் போட்டு அந்த இடத்தில் சிறுது நேரம் கலவரம் ஆகி பிறகு அவர்கள் நால்வர் மட்டும் அன்று விமானம் ஏற அனுமதிக்கப் படவில்லை போலீசார் அவர்களை அழைத்து சென்று விட்டார்கள் ,அந்த பிள்ளைகள் இருவரும் ,அவரது மனைவியையும் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது ,அந்த பிள்ளைகளின் கண்களின் கண்ணீரும்,ஏக்கமும் ஒரு அடிபட்ட அவமான உணர்வும் இப்போதும் என்னால் மறக்க முடிவதில்லை .....நேற்று தமிழ்நாடு அரசாங்கம் இனிமேல் அனைத்து பெரிய மால்களிலும் மதுக் கடை கொண்டு வர தீர்மானித்துள்ளது ..எப்படி எல்லாம் குடும்பங்கள் பாதிக்கப் படப் போகிறது என்பது கேள்வி குறி//?

Monday 2 September 2013

இங்கு வந்த முதல் ஆண்டிலேயே இரண்டு மரண தண்டனை செய்திகள் வெளி வந்தது ,இங்கு எப்போதும் தண்டனை நிறைவேற்றிய உடன் தான் செய்தி வெளியிடுவார்கள் ,1.போதைப் பொருள் கடத்தல் 2.கற்பழிப்பு ,அந்த ரெண்டாம் செய்தி தான் கொஞ்சம் மனம் கலக்கம் கொடுத்தது ஏனென்றால் அவர் தமிழ் மொழி பேசும் தமிழகம் சார்ந்தவர் ,இங்கு வேலைக்கு வந்தவர் ,மனைவியும்,குழந்தையும் உண்டு ,மதுரையை சேர்ந்தவர் ,குடி போதையில் அவருக்கு மது பரிமாறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு சீன பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் நிருபிக்கப் பட்ட குற்றம் உடனே தண்டனை ,அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் கூட சொல்லி இருந்தார் "நம் நாட்டிலிருந்து வெளிஊருகளுக்கு பிழைக்க செல்பவர்கள் தயவு செய்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மனதில் கொண்டு ,மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" ,ஒரு விலை மதிப்பற்ற உயிர் அநியாமாக பறி போய் விட்டது ,அவர் இங்கு வந்த கடன் கூட அடைய வில்லை என்றும் பிறகு செய்தி வெளி வந்தது ...அதே போல் போதைப் பொருள் கடத்தலும் உடனுக்குடன் தண்டிக்கப் படுவார்கள்
தற்போது இங்கு சட்டம் கொஞ்சம் திருத்தி அமைக்கப் பட்டு உள்ளது ,முன்பு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நிருபணம் ஆகி விட்டால் உடனே மரண தண்டனை ,இப்போது அதன் பின்னணியை ஆராய்ந்து பிறகு அதற்க்கு ஏற்ப தண்டனை வழங்கப் படும் என்று மாற்றம் கண்டு உள்ளது ,போன வாரம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கொலைக் குற்றவாளி இந்த புதிய சட்டத் திருத்தம் காரணமாய் மரண தண்டனையிலிருந்து தப்பித்தார் ,தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது ....கொஞ்சம் ஆறுதலான செய்தியும் கூட ......
சமீப  காலமாக அதிகம் இணையம்  வழி பரவி வரும் ஒரு திடுக்கிடும் தகவல் ,காந்திஜி,மகாத்மா ,இந்தியாவின் தேசத்தந்தை ,அகிம்சைக்கு வித்திட்டவர் ,உலகம் எங்கும் இவருக்கு சிலைகள் உண்டு,இவரைப் பின்பற்றி இன்றும் வாழ்ந்து வரும் தலைவர்கள் உண்டு ,இவரைப் பற்றி இவர் சிறப்பைப் பற்றி எழுதாத அரசியல் தலைவர்கள் இல்லை ,உலகின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளவர் .இவருக்கு தான் இந்த கதி,மிகவும் கேவலமான செய்திகள் அவரைப் பற்றிய அவதூறான செய்திகள் பரப்புவதில் யாருக்கு நன்மை கிடைக்கப் போகிறது?அது உண்மைய?பொய்யா?என்று கூடத் தெரியாமல் மலிவான செய்திகள் வெளியிடுவதில் என்ன அப்படி ஒரு சந்தோசம்?இங்கு மட்டும் அப்படி  ஒரு செய்தி ஒரு தலைவர் பற்றி வெளி வந்து இருந்தால் இந்நேரம் அவர்கள் சிறையில் ,ஆனால் இந்தியா ஏன் இது போல் அவதூறு இணைய பரப்புதல்களை நிறுத்த முடிவதில்லை?
சமீபத்தில் ஒரு தோழி கூட பதிவு செய்து இருந்தார் ,அவரோடு வேலை செய்யும் ஒரு ஆண் நண்பர் (இவருக்கு பிடிக்காதவர்) அவரோடு வேலை செய்யும் மற்றொரு  ஆண் நண்பரின் மனைவியோடு கள்ளத் தொடர்பு வைத்து இருக்கிறார் ,அந்த நண்பர் பாவம் தெரிந்தும் தெரியாதது போல் இருந்து விடுகிறார் என்று ,எப்படி??அடுத்தவர் சொந்த விஷயங்களில் தலையிடவும் தவறான செய்தி பரப்பவும் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?இவர் யார் அதைப் பற்றி விமர்சிக்க?இவ்வாறு செய்வதால் இவர் தரம் தான் மற்றவர்கள் முன் தாழ்ந்து போகிறது என்று நினையாமல் எழுதி உள்ளார் ,இவர் பதிவிற்கு ஆவலோடு விமர்சனம் கொடுத்த நண்பர்கள் ஒரு கால கட்டத்தில் இவரைப் பற்றி அவர்கள் பதிவில் வெளியிட எவ்வளவு நாள் ஆகும்?அப்போது இவருக்கு எப்படி இருக்கும்?தற்போதைய கால கட்டத்தில் ஆண்களால் பெண்களுக்கு வரும் தொல்லைகளைக் காட்டிலும் பெண்களால் வரும் தொல்லைகள் தான் அதிகமாகி வருகிறது .......
நான் அந்த தோழியை அடுத்தவரின் சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பரப்பிய தோழியை நட்பின் வட்டத்திலிருந்து நீக்கி விட்டேன் அவரிடம் என் ஒத்துக் கொள்ள முடியாத மனத் தாங்களை சொல்லி விட்டே .....