Monday 2 September 2013

இந்தியாவில் சென்ற  மாதம் நடந்த விபத்தும் ,அதன் தொடர்பான வன்முறைகளும் .....மக்கள் எதனால் இப்படி நடந்து கொள்கிறார்கள்?பிறகு எப்படி எதற்க்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்கிறார்கள்??விரைவு ரயில் நிற்காத இடத்தில் இவர்கள் நின்று கொண்டு ,பிறகு அந்த ரயில் நிறுத்தவில்லை என்கிற காரணத்திற்க்காக இந்த ரயிலையும் ,அதனுள் இருக்கும் பயணிகளையும் சேதப்படுத்தி ரயிலை எரிப்பது எவ்வளவு நியாயம்?இதனால் யாருக்கு நஷ்டம்?இதுவும் யாருடைய பணம்??எப்படி இதை சரி செய்ய முடியும்?போன உயிர்களுக்கு யார் பதில் சொல்வார்கள்?அவர்கள் குடும்பங்கள் நிலை என்ன ஆகும்?கோபம் தலைக்கேறி ஒரு பொதுச் சொத்தை நாசப் படுத்த யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்?இனி அந்த விரைவு ரயில் சரி செய்யப் பட்டு பயணிகள் ,சுற்றுல்லா பயணிகள் எப்படி நம்பிக்கையோடு அதில்  பயணம் செய்ய முன் வருவார்கள்?இது போன்ற செயல்களால் நாம் நம் நாட்டையும் கீழிறக்கி நாமும் முன்னேறாமல் பொய் விடுகிறோம் என்பது தான் உண்மை ....

No comments:

Post a Comment