Monday 16 September 2013

ஆவிகள்----உண்டு,இல்லை என்று பல்வேறு ஆய்வுகள் ,முடிவுகள் என்று வெளி வந்து கொண்டு இருந்தாலும் சில நேரங்களில் சில தாங்க முடியாத கொடுமையான நிகழ்வுகளைப் பார்க்கும் போது,படிக்கும் போது உண்மையாக அப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமோ என்று நான் நினைப்பது உண்டு .....போன வெள்ளியன்று 13ம் தேதி ஒருவரது நேரடி அனுபவம் கேட்ட போது ஒவ்வொரு மறைந்த உயிர் மீதும் பயம் போய்,மதிப்பும் மரியாதையும்,பக்தியும் வந்து விட்டது எனலாம் ....அந்த நபர்,வயது 28 ,இந்தியாவில் இருந்து இங்கு வந்து வேலை செய்பவர்,அவர் இங்கு வந்த புதிது அப்போது அவர் வயது 25,தன் மேலதிகாரி ஒரு சீனர்,இந்த நபர் இங்கு கட்டிட வேலைக்கு வந்து இருப்பவர்வந்த புதிது என்பதால் இவருக்கு வேலை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு அந்த உயர் சீன அதிகாரி வசம்,இவரோடு மிக நன்றாக பழகுவராம்ஒரு நாள் இவரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அவருக்கு பஜ்ஜியும்,டீஉம் வாங்கிக் கொண்டு ,இந்த பையனையும் சாப்பிட்டு விட்டு வரச்  சொல்லி இருக்கிறார் ,ஐவரும் அவ்வாறு ரொட்டி சாப்பிட்டு விட்டு ,அவருக்கும் பஜ்ஜியும்,டீயும் வாங்கிக் கொண்டு வந்து கொண்டு இருந்து இருக்கிறார்,அந்த அதிகாரி இவர் வருவதைப் பார்த்து விட்டு எழுந்து வேலை செய்யும் இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு அங்கு வேலை செய்யும் ஆட்களை எண்ணிக் கொண்டு இருந்து இருக்கிறார் அப்போது திடீரென்று அவர் நின்று கொண்டு இருந்த இடத்தின் மணல் சரிந்து அவர் கீழே விழ ஆரம்பித்து இருக்கிறார் ,இந்த பையன் அந்த இடத்திற்கு ஓடி போகும் முன்னே அவர் கிடுகிடுவென்று கீழே போய் அவர் தலை வேறு உடல் வேறு என்று பிரிந்து விட்டதாம்,இந்த பையன் கை,கால் நடுங்க ஆரம்பித்து பின் ஒரு வழியாக அனைத்து விசாரணைகளும் முடிந்த பிறகு அன்று  இரவு,இந்த பையனால் தூங்க முடியவில்லை ஒரு வழியாக தூங்க முற்பட்ட போது அந்த அதிகாரி இவரிடம் வந்து கேட்டு இருக்கிறார் "எனக்கு பஜ்ஜியும்,டீயும் வாங்கி வந்தாயா?நீ சாப்பிட்டாயா?"அன்று முதல் இன்று வரை அந்த பையன் எது வாங்கி சாப்பிட்டாலும் அந்த அவர் உட்கார்ந்து இருந்த மரம் பக்கத்தில் கொஞ்சம் பகிர்ந்து வைத்து விட்டு தான் சாப்பிடுவாராம்,இவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து இவர் புலம்பும் போது அவர் சொல்வாரம்"டோன்ட் வொர்ரி "எல்லோரும் மிகவும் ஆச்சரியமாக கேட்பார்களாம் யாரிடம் பேசுகிறாய் என்று ?அவரிடம் சொல்லிய பிறகு இவரது பிரச்சனை கொஞ்சம் தீர்வு கிடைப்பது போல் ஒரு தெம்பு இவருக்கு வருமாம் ...உண்மையில் ஆவிகள் உண்டுங்க என்று அவர் சொன்ன போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.......ஆனந்த புரத்து வீடு  ..படம் உண்மை தான் போல......

Sunday 8 September 2013

எனக்கு கொஞ்சம் நெருக்கமான ஊடகத்  துறையில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் தோழி பகிர்ந்து கொண்டது போன வாரம் காலை நான் சாலையைக் கடக்க முற்பட்ட போது ஒரு பாட்டியும் என்னோடு வந்தார் ,அவரை அவரது முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வரும் போது அவர் சொன்னது "எனக்கு 8 பிள்ளைகள்,எல்லோரும்வேலைசெய்கிறார்கள்,அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது,பேரக் குழந்தைகளும் உண்டு,என்ன காரணமோ?இங்கு வந்து என்னை சேர்த்து விட்ட நாள் முதல் யாரும் என்னைப் பார்க்க வரவில்லை,இங்குள்ள சூழ்நிலை தெரியும்,வேலைப் பளு என்று எனக்கு ஒரு உதவி செய் ,தயவு செய்து யாராவது ஒருவரை எனக்கு போனிலாவது அழைத்து பேசும்படி சொல் பெண்ணே என்று சொல்லி தன் பெயர் சொன்னார்"அவருக்கு பிள்ளைகள் பெயர்கள் மட்டும் தான் தெரிகிறது அவர்கள் வேலை பார்க்கும்  இடமோ,,தொலை பேசி எண்ணோ தெரியவில்லை  மிகவும் பரிதாபமாக இருந்தது பிறகு நான் அந்த இல்லத்தின் தொலை பேசி எண்களை வாங்கி வைத்துக் கொண்டேன்,பாட்டி நான் உங்களோடு பேசுகிறேன்,என்னால் முடிந்த போது வந்து பார்க்கிறேன் என்று சொல்லி வந்தேன் என்றாள்,"நாம் தான் எவ்வளவு கொடூரமாக மாறி வருகிறோம் ,பணத்திற்காக வீட்டை பெற்றோருக்கு தெரியாமல் விற்று விட்டு ,அவர்களை கொஞ்ச நாள் இங்கு இருங்கள் என்று சொல்லி ஏமாற்றி முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு நாட்டை விட்டு சென்று விடுவதும், உள்ளூரில் இருந்து கொண்டு தங்கிப் பற்றி தவறான தகவல்களைக் கொடுப்பது என்று புலம்பித் தீர்த்து விட்டாள்,"எனக்கும் கூட ஒரு அனுபவம் உண்டு மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் ரயிலில் செல்ல நேர்ந்த போது,திருச்சியில் அந்த 50 களில் இருந்த அந்த பெண்ணைப் பார்த்தோம்,ஒவ்வொரு பெட்டியாக ஏறி யாரையோ தேடுவது போல் தேடினார்,,கையில் கரும்பு வைத்து இருந்தார்,சிலரை அடிக்கவும் செய்தார்,மிகவும் பயமாக இருந்தது ஒரு போலீஸ் பின்னால் வந்து எங்களைக் காப்பாற்றினார்,அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது "இப்போது இது போல் நிறைய மனிதர்கள் உண்டும்மா,இங்கு சுற்றுப் பயணம் வருபவர்கள் இது போல் மன நிலை சரியில்லாதவர்களை ,வயதானர்களை,பராமரிக்க முடியாமல் வேண்டுமென்றே இது போல் மொழி தெரியாத இடத்தில் விட்டு விட்டு சென்று விடும் போக்கு அதிகரித்து வருகிறது "என்றார் .....
கணபதி என்னும் களிரினைப் போற்றின்
கவலைகள் நீங்கும் ,காமம் தொலையும்
விநாயகன் என்னும் வீரனை வணங்கின்
வினைகள் தீரும்,வெற்றிகள் விளையும்
ஐய்ங்கான் என்னும் ஐயனை நினைக்கின்
அல்லல்கள் தவிரும் ,அன்பே மலரும்
பிள்ளையார் என்னும் பெயரினை வணங்கின்
பெருமைகள் சேரும்  ,பிணிகள் அகலும்
விநாயகனைத் துதித்துடுவோம்
சகல சௌபாக்கியங்களையும் பெற்றிடுவோம்
குழந்தை முதல் இன்று வரை அனைவருக்கும் (இந்து மதம் தழுவிவர்கள்)சொல்லிக் கொடுக்கப்படும் பட்டிருக்கும் முதல் கடவுள் துதி,அன்று இனம் ,மதம் பாராது அனைவரும் ஒன்று சேர்ந்து மிக ஆர்வமாக களிமண் சேகரித்து,எருக்கம் பூக்கள் சேகரித்து,அருகம் புல் பிடுங்கி என்று மிக ஒற்றுமையாக போட்டி போட்டுக் கொண்டு யார் வீட்டில் மிக அழகிய பிள்ளையார் செய்கிறார்கள்,எவ்வளவு காசு நெற்றி மேல் வைக்கிறார்கள் 5ம் நாள் கழித்து எந்த குளத்தில் போட வேண்டும் .என்றெல்லாம் ஜாதி ,மத பேதம் இன்றி யோசிப்போம்,கொண்டாடுவோம்,எல்லோர் வீடுகளுக்கும்கொழுக்கட்டையும்,பொரியும்,பாயசம்,அவல்,மோதகம் கொடுப்பதில் எங்களுக்குள் மிகப்  பெரிய போட்டி நடக்கும்,,லீவு வேறா கேட்கவே வேண்டாம் பாட்டிகள்,தாத்தாக்கள் அன்று எல்லோருக்கும் பிள்ளையார் பற்றி கதைகள் சொல்வார்கள்,சில வீடுகளில் புதுத் துணிகள் கூட எடுப்பார்கள் கதைகள் கேட்க வரும் குழந்தைகளுக்கு கொடுக்க என்று,மிக அருமையான உண்மையான பிள்ளையார் சதுர்த்தி அப்போது கொண்டாடப் பட்டது ...கண்டிப்பாக பிள்ளையாரும் மிக சந்தோஷமாக இருந்திருப்பார் அன்று எங்களைப் பார்த்து ....இன்று எப்படி இப்படிஎல்லாம் யோசிக்க முடிகிறது,வர்ணம் பூச முடிகிறது?இனம் பிரிக்க முடிகிறது?ஒவ்வொரு தெரு வாரியாக ஒவ்வொரு உயரத்தில்,நிறத்தில் வடிவத்தில் அனைத்தையும் பார்க்கையில் பக்தி போய் நெஞ்சில் ..பயம் வருகிறது,போன 4 வருடங்களுக்கு முன் இந்த பண்டிகை அன்று நான் அங்கு இருந்த போதுஎங்கும் ஒருவித இறுக்கம்,அதீத பயம் கலந்த பக்தி நிலவுவது போல் தோன்றியது பிற மதம் சார்ந்த எங்கள் நண்பர்கள் யாரும் அந்த ஊர்வலம் முடிகின்ற  வரையில் வெளியல் வரவில்லை எங்களை சந்திக்க ...எங்களால்  உங்களுக்கு
தொந்தரவு வேண்டாம் தொலைபேசியில் பேசினால் போதும் என்று இருந்துவிட்டார்கள் ,அப்போதைய கிராமத்து பள்ளியில்படிக்கும் போது நடுவில் என்னோடு சேர்ந்த ஒரு பெண் தன் குடும்பம் மும்பை கலவரத்தால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்து ஓடி வந்துசேர்ந்த போது இந்த பக்கம் பரவாயில்லை என்று நாங்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொண்டோம்..இன்றோ/???//
எந்தக் கடவுள் இவர்களிடம் சொன்னது இப்படிக் கொண்டாடவென்று?அந்த கடவுள் தான் சொல்ல வேண்டும் இன்றைய தன் பெயரால் நடக்கும் கலவரங்களை,மிகைப்படுத்துதலை நிறுத்த வேண்டி  ..நடக்குமா???உயிரோடு இருக்கும் வரை வேண்டிக் கொள்வோம்........ ...

Thursday 5 September 2013

ஆசிரியர் தினம் -எனக்குத் தெரிந்த சரஸ்வதி டீச்சர்,எங்கள்  ஊரில் அப்போது 10ம் வகுப்பக்கு மேல் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் இல்லை ,பள்ளிக்கு வருவது ஒன்றும் மிக முக்கியமாக யாரும் அங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் ,பள்ளி நேரம் துவங்கும் முன் சரசு டீச்சர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று பார்த்து விட்டு குறித்துக் கொள்வார் ,யார் யார் வரவில்லை என்று,பிறகு அந்த பிள்ளைகளின் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று ,பேசி பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வருவார்,பல சமயங்களில் பெற்றோரோடு சண்டை போட்டு அழைத்து வந்திருக்கிறார் ,பிறகு எல்லோரும் வந்த பிறகு சரியாக காலை கொடி வணக்கம் பாட வேண்டும் யார் யார் பாடுகிறார்கள் என்று  கவனிப்பார்,பாடவில்லை என்றால் அடுத்த நாள் அவர்கள் தான் எல்லோர் முன்னும் காலையில் பாடியாக வேண்டும்,இப்படித்தான் தமிழ்த்  தாய் வாழ்த்து,ஆத்திச்சூடி,திருக்குறள்,வாய்ப்பாடு என்று இன்றும் என்னால் மறக்காமல் சொல்ல முடிகிறது,ஒருமுறை ஒரு இரெண்டாம் வகுப்பு படிக்கும் பையனின் புத்தகப்பை பெரியதாக இருந்தது ,சரசு டீச்சர் சந்தேகம் வந்து அந்த பையை சோதித்த போது அதில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து விட்டார் ,பிறகு நேராக அந்த பையன் வீட்டிற்கு சென்று அவன் அப்பாவிடம் "நீ உன் தொழிலுக்காக பிள்ளையின மனதையும்,படிப்பையும் கெடுத்து விடாதே,நான் இந்த முறை போலீசில் சொல்லவில்லை,இனிமேல் பிள்ளையின் பையில் பார்த்தால் கண்டிப்பாக சொல்லிவிடுவேன் என்று மிரட்டி விட்டு வந்தார் ,இத்தனைக்கும் அவன் அப்பா பெரிய ரௌடி ,சரசு டீச்சர் யாருக்கும் எதற்காகவும் பயப் பட மாட்டார் ,"நம்மிடம் தப்பு இல்லாத போது,நாம் தவறு செய்யாத போது நாம் யாருக்கும் பயப் படக் கூடாது என்பது அவருடைய கொள்கை"அதை இறுதி வரை பின்பற்றினார்,மதிய உணவுப் பிரிவு,விளையாட்டு,டான்ஸ்,பாட்டு,மாநில அளவிலான  போட்டி என்று எந்த ஒரு பிரிவிற்கும் அவரை பணிக்கும் போதும் தயங்காமல்,செய்வார்,பிள்ளைகளை உற்சாகப் படுத்தி அவர் இருந்த வரை அவர் வேலை செய்த பள்ளி கண்டிப்பாக பரிசுகளை வென்றுவிடும்படி செய்தவர், முதல் முதலாக தமிழக அரசால் 'நல்லாசிரியர் விருது "அறிமுகப் படுத்திய போது இவருக்கும் கிடைத்தது ,இவர் மறைந்த பிறகு,இன்றும் ஊருக்கு செல்லும் போது,போலீசாக,மிலிடரி ஆபீசராக ,டீச்செராக ,தாதியாக,பஸ் நடத்துனராக,கணினித் துறையில் வேலை செய்பவர் ,வெளி நாட்டில் வேலை செய்பவர் என்று ஜாதி மதம் இனம் பாராது  பலரும்  என்னை அடையாளம் கண்டு கொண்டு சொல்வார்கள் "உங்கள் அம்மா சரசு டீச்சர் இல்லை என்றால்,நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன்,அன்று அவர் என் வீட்டுக்கு வந்து என்னை அழ அழ பள்ளிக்கு அழைத்து வந்திருக்க வில்லை என்றால் இன்று என் நிலை என்ன ஆகியிருக்குமோ என்று சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்வார்கள்,அன்று கஞ்சா விற்ற தகப்பனின் மகன் இன்று அதே ஊரில் ஒரு போலீஸ் அதிகாரி ,போன முறை கோவிலுக்கு சென்று இருந்த போது தானாக முன் வந்து அந்த அதிகாரி என்னிடம் சொன்னார்  அப்போது நான் நினைத்துக் கொண்டேன்  என் அம்மாவும் ஏதோ செய்து விட்டுப் போய் இருக்கிறார் என்று ...இன்றும் என் அம்மா போல் கோடி கோடியாய் நேர்மையான ஆசிரியர்கள் உண்டு ,ஒவ்வொரு ஆசிரியைகளும் ஆசிரியர்களும்,ஏதோ ஒரு வகையில் வழியில் யாரரவது ஒருவர் வாழ்விலாவது மாற்றம் செய்து விட்டும்,செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள் அவர்களால் முடிந்த வரையில் .......அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .... .....

Wednesday 4 September 2013

சென்னை விமான நிலையம் ,இரவு 11.50,ரெண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது ,ஒரு கணவன்,மனைவி,ரெண்டு குழந்தைகள் (1 ஆண்,1 பெண் )வயது இருவருக்கும் 9,7 இருக்கும் ,அனைத்து நுழைவாயில் பரிசோதனைகளும் முடித்து வந்தவுடன் பேசி,ஆடி,ஓடித் திரிந்து கொண்டிருந்தனர் இரு பிள்ளைகளும் ,முகத்தில்  அவ்வளவு சந்தோசம் ,முதல் முறையாக விமானப் பயணம் ,இருவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்கள் அம்மாவைத் துளைத்துக் கொண்டிருந்தனர்,அம்மா முகத்தில் சந்தோசம் ஒருவித படபடப்பு இருந்தது ,முதல் முறை விமானப் பயணம் அப்பட்டமாக அந்த நால்வர் முகத்தில் தெரிந்தது ,கணவர் கொஞ்ச நேரம் காண வில்லை பிறகு வந்தார் வந்ததில் இருந்து கொஞ்சம் தள்ளாட்டம் ,நேரம் கடந்தது ஒருவழியாக நாங்கள் செல்லும் விமானத்திற்கு அழைக்கப் பட்டோம்,எல்லோரும் வரிசையில் நிற்கும் போது குழந்தைகள் உள்ளவர்கள் முதலில் வர அழைக்கப் பட்டார்கள்,இந்த குழந்தைகள் இருவரும் வேகமாக ஒடிச் சென்றனர் வரிசையில் ,அங்கும் சிறிது நேரம் ஆனது,உடனே அந்த அப்பா அங்கு இருந்த நபர்களிடம் கத்த ஆரம்பித்து விட்டார்,கத்தல் மிகப் பெரிதாகி அவர் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே தன்னிலை  மறந்து போய் தன் உடைகளை கழற்ற  ,போலீஸ் வரவழைக்கப் பட்டு,அவரை அமைதிப் படுத்த அப்போதும் அவர் போலீசாரோடு சத்தம் போட்டு அந்த இடத்தில் சிறுது நேரம் கலவரம் ஆகி பிறகு அவர்கள் நால்வர் மட்டும் அன்று விமானம் ஏற அனுமதிக்கப் படவில்லை போலீசார் அவர்களை அழைத்து சென்று விட்டார்கள் ,அந்த பிள்ளைகள் இருவரும் ,அவரது மனைவியையும் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது ,அந்த பிள்ளைகளின் கண்களின் கண்ணீரும்,ஏக்கமும் ஒரு அடிபட்ட அவமான உணர்வும் இப்போதும் என்னால் மறக்க முடிவதில்லை .....நேற்று தமிழ்நாடு அரசாங்கம் இனிமேல் அனைத்து பெரிய மால்களிலும் மதுக் கடை கொண்டு வர தீர்மானித்துள்ளது ..எப்படி எல்லாம் குடும்பங்கள் பாதிக்கப் படப் போகிறது என்பது கேள்வி குறி//?

Monday 2 September 2013

இங்கு வந்த முதல் ஆண்டிலேயே இரண்டு மரண தண்டனை செய்திகள் வெளி வந்தது ,இங்கு எப்போதும் தண்டனை நிறைவேற்றிய உடன் தான் செய்தி வெளியிடுவார்கள் ,1.போதைப் பொருள் கடத்தல் 2.கற்பழிப்பு ,அந்த ரெண்டாம் செய்தி தான் கொஞ்சம் மனம் கலக்கம் கொடுத்தது ஏனென்றால் அவர் தமிழ் மொழி பேசும் தமிழகம் சார்ந்தவர் ,இங்கு வேலைக்கு வந்தவர் ,மனைவியும்,குழந்தையும் உண்டு ,மதுரையை சேர்ந்தவர் ,குடி போதையில் அவருக்கு மது பரிமாறி அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒரு சீன பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் நிருபிக்கப் பட்ட குற்றம் உடனே தண்டனை ,அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் கூட சொல்லி இருந்தார் "நம் நாட்டிலிருந்து வெளிஊருகளுக்கு பிழைக்க செல்பவர்கள் தயவு செய்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மனதில் கொண்டு ,மதித்து நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" ,ஒரு விலை மதிப்பற்ற உயிர் அநியாமாக பறி போய் விட்டது ,அவர் இங்கு வந்த கடன் கூட அடைய வில்லை என்றும் பிறகு செய்தி வெளி வந்தது ...அதே போல் போதைப் பொருள் கடத்தலும் உடனுக்குடன் தண்டிக்கப் படுவார்கள்
தற்போது இங்கு சட்டம் கொஞ்சம் திருத்தி அமைக்கப் பட்டு உள்ளது ,முன்பு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நிருபணம் ஆகி விட்டால் உடனே மரண தண்டனை ,இப்போது அதன் பின்னணியை ஆராய்ந்து பிறகு அதற்க்கு ஏற்ப தண்டனை வழங்கப் படும் என்று மாற்றம் கண்டு உள்ளது ,போன வாரம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கொலைக் குற்றவாளி இந்த புதிய சட்டத் திருத்தம் காரணமாய் மரண தண்டனையிலிருந்து தப்பித்தார் ,தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது ....கொஞ்சம் ஆறுதலான செய்தியும் கூட ......
சமீப  காலமாக அதிகம் இணையம்  வழி பரவி வரும் ஒரு திடுக்கிடும் தகவல் ,காந்திஜி,மகாத்மா ,இந்தியாவின் தேசத்தந்தை ,அகிம்சைக்கு வித்திட்டவர் ,உலகம் எங்கும் இவருக்கு சிலைகள் உண்டு,இவரைப் பின்பற்றி இன்றும் வாழ்ந்து வரும் தலைவர்கள் உண்டு ,இவரைப் பற்றி இவர் சிறப்பைப் பற்றி எழுதாத அரசியல் தலைவர்கள் இல்லை ,உலகின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளவர் .இவருக்கு தான் இந்த கதி,மிகவும் கேவலமான செய்திகள் அவரைப் பற்றிய அவதூறான செய்திகள் பரப்புவதில் யாருக்கு நன்மை கிடைக்கப் போகிறது?அது உண்மைய?பொய்யா?என்று கூடத் தெரியாமல் மலிவான செய்திகள் வெளியிடுவதில் என்ன அப்படி ஒரு சந்தோசம்?இங்கு மட்டும் அப்படி  ஒரு செய்தி ஒரு தலைவர் பற்றி வெளி வந்து இருந்தால் இந்நேரம் அவர்கள் சிறையில் ,ஆனால் இந்தியா ஏன் இது போல் அவதூறு இணைய பரப்புதல்களை நிறுத்த முடிவதில்லை?
சமீபத்தில் ஒரு தோழி கூட பதிவு செய்து இருந்தார் ,அவரோடு வேலை செய்யும் ஒரு ஆண் நண்பர் (இவருக்கு பிடிக்காதவர்) அவரோடு வேலை செய்யும் மற்றொரு  ஆண் நண்பரின் மனைவியோடு கள்ளத் தொடர்பு வைத்து இருக்கிறார் ,அந்த நண்பர் பாவம் தெரிந்தும் தெரியாதது போல் இருந்து விடுகிறார் என்று ,எப்படி??அடுத்தவர் சொந்த விஷயங்களில் தலையிடவும் தவறான செய்தி பரப்பவும் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?இவர் யார் அதைப் பற்றி விமர்சிக்க?இவ்வாறு செய்வதால் இவர் தரம் தான் மற்றவர்கள் முன் தாழ்ந்து போகிறது என்று நினையாமல் எழுதி உள்ளார் ,இவர் பதிவிற்கு ஆவலோடு விமர்சனம் கொடுத்த நண்பர்கள் ஒரு கால கட்டத்தில் இவரைப் பற்றி அவர்கள் பதிவில் வெளியிட எவ்வளவு நாள் ஆகும்?அப்போது இவருக்கு எப்படி இருக்கும்?தற்போதைய கால கட்டத்தில் ஆண்களால் பெண்களுக்கு வரும் தொல்லைகளைக் காட்டிலும் பெண்களால் வரும் தொல்லைகள் தான் அதிகமாகி வருகிறது .......
நான் அந்த தோழியை அடுத்தவரின் சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பரப்பிய தோழியை நட்பின் வட்டத்திலிருந்து நீக்கி விட்டேன் அவரிடம் என் ஒத்துக் கொள்ள முடியாத மனத் தாங்களை சொல்லி விட்டே .....
இந்தியாவில் சென்ற  மாதம் நடந்த விபத்தும் ,அதன் தொடர்பான வன்முறைகளும் .....மக்கள் எதனால் இப்படி நடந்து கொள்கிறார்கள்?பிறகு எப்படி எதற்க்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்கிறார்கள்??விரைவு ரயில் நிற்காத இடத்தில் இவர்கள் நின்று கொண்டு ,பிறகு அந்த ரயில் நிறுத்தவில்லை என்கிற காரணத்திற்க்காக இந்த ரயிலையும் ,அதனுள் இருக்கும் பயணிகளையும் சேதப்படுத்தி ரயிலை எரிப்பது எவ்வளவு நியாயம்?இதனால் யாருக்கு நஷ்டம்?இதுவும் யாருடைய பணம்??எப்படி இதை சரி செய்ய முடியும்?போன உயிர்களுக்கு யார் பதில் சொல்வார்கள்?அவர்கள் குடும்பங்கள் நிலை என்ன ஆகும்?கோபம் தலைக்கேறி ஒரு பொதுச் சொத்தை நாசப் படுத்த யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்?இனி அந்த விரைவு ரயில் சரி செய்யப் பட்டு பயணிகள் ,சுற்றுல்லா பயணிகள் எப்படி நம்பிக்கையோடு அதில்  பயணம் செய்ய முன் வருவார்கள்?இது போன்ற செயல்களால் நாம் நம் நாட்டையும் கீழிறக்கி நாமும் முன்னேறாமல் பொய் விடுகிறோம் என்பது தான் உண்மை ....

Thursday 29 August 2013

இன்று எங்கள் ஊரில் "அர்ப்பண நாள் "...காலையிலிருந்து எல்லோரும் வானொலி,தொலைகாட்சி வழி பாட்டு விரும்பிக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்,அதிகம் அம்மாவுக்கும்,மனைவிக்கும்,தோழனுக்கோ,தோழிக்கோ கேட்பது குறைவு தான் ,நாம் தான் சுயநலப் பிம்பங்கள் ஆச்சே,அவர்கள் இருவர் மட்டும் தான் எப்போதும் நம் நினைவில் வருகிறார்கள்,நாம் ரொம்ப நல்லவங்க என்று வேறு காண்பிக்க வேண்டும் அது ரொம்ப முக்கியம்,....எனக்கு இந்த நாளில் என்றும் நினைவுக்கு வருபவர் எனது இனிய தோழி ,அப்போது நான் இந்த நாட்டுக்கு வந்து 2 வருடங்கள் இருக்கும் ,பள்ளியில் பிள்ளையை அழைத்து வரும் போது,பார்த்து பேசிக் கொள்வோம்,பிறகு அது மறக்க முடியாத குடும்ப பிணைப்பாக ஆனது ,அவருக்கு 1 ஆண்,1 பெண் என ரெண்டு பிள்ளைகள்,தோழி பல் மருத்துவரும் கூட,ஆனால் இங்கு அவர் வேலை பார்க்கவில்லை ,ஒரு நாள் திடீரென்று என் கைகளைப் பிடித்து அழுதபடி சொன்னார் "நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் ,6மாதங்களுக்குள்  என்றார் "கேட்ட போது "நாங்கள் 2 வருடங்களுக்கு முன் ஒரு பிறந்த நாள் பார்ட்டி போயிருந்தோம் ,அப்போது எல்லோரோடும் புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்,அதில் இருந்த யாரோ ஒருவர் இந்த அரசால் சந்தேகப் படும் வட்டத்துக்குள் இருப்பதால் அன்று அங்கு வந்து இருந்த அனைவருக்கும் இது போல் ஒரு ஓலை வந்து உள்ளது என்றார் ,அந்த 6 மாதத்திற்குள் அவர் வீடு விற்று ,குறைத்த விலைக்கு ,கணவரோடும்,பிள்ளைகளோடும் கண்ணீரோடு போகும் போது என்னிடம் சொன்னது இப்போது நினைக்கும் போதும் எனக்கு கண்ணீர் துளிர்க்கும்,""நாங்கள் தமிழ் மொழி பேசுபவராய் பிறந்ததைத் தவிர வேறு பிழை ஏதும் செய்யவில்லை ""

Tuesday 27 August 2013

காதல் என்பதும் கல்யாணம் என்பதும் தற்போதைய காலகட்டத்தில் அதன் பொருளை மாற்றிக் கொண்டு விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்,ஒரு பண்ட மாற்று ,ஒரு வியாபாரம்,ஒரு பொழுதுபோக்கு,ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் ,வேலைக்காரிக்கு,வேலைக்காரனுக்கு பதில்,அந்த (தேவைக்கு),பணக்காரனோ,காரியோ ஆகிட ஒரு எளிய  வழிஇப்படி இன்னும் பல....எதற்கு காதல் செய்கிறோம் என்று தெரியாமல் ஒரு கூட்டம்,பின்னர் கல்யாணம் என்று வரும் போதுமட்டும் தான் இதுவரை கண்ணுக்கு தெரியாத அனைத்து குறைகளையும் கண்டுபிடிக்கும் ஒரு கூட்டம்,....இன்று எங்கள் ஊர் ஊடகத்தில் ஒரு பெண் சொல்லிய செய்தி இப்படி எல்லாம் யோசிக்க வைத்தது ,அந்த பெண்ணின் உறவுக்காரப் பெண் ஒரு பையனை விரும்பியதாகவும் இருவரும் கிட்டத்தட்ட 10 வருடங்கள் காதலித்து விட்டு பிறகு திருமணம் செய்து கொண்டு உள்ளனர் ,பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் ,ஆனால் திருமணம் முடிந்து 8 மாதத்தில் விவாகரத்து கோரி உள்ளனர்,தற்போது நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது,ஏன்,எதற்கு  என்று இருவரும் சொல்லவும் மறுக்கின்றனராம்....10 வருடங்கள் தெரியாத விஷயம் 8 மாதங்களில் குறையாக தெரிந்தது என்ன என்று இரு வீட்டார்களும் புலம்புகின்றனர் .....
WHEN YOU HOLD  ME AND SLEEP EVEN AFTER A GOOD LOVE MAKING ---IT  IS REAL LOVE
WHEN YOU STILL HOLD ME AFTER AWAKENING FROM SLEEP ---IT IS BEYOND LOVE .....என்பது தான் என் நினைவுக்கு வந்தது .....எத்தனை பேர் இதன் முழு அர்த்தம் புரிந்து இருக்கிறோம்?வாழ்கிறோம்?......
நண்பர்களைப் பற்றி படிப்பது ,பேசுவது ,நண்பர்களோடு இருப்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று ,எத்தனை பேர் நண்பர்கள் மூலம் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்??வாழ்க்கையில் மறக்க முடியாத பாடம்,கதைகளில் வருவது போல் நிஜத்திலும் நடந்த உண்மைப் பாடம்....
என்னோடு அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்த்த இரு இணைபிரியாத தோழியர்கள் அவர்கள்,எப்போதும் ஒன்றாக இருப்பார்கள்,வேலை நேரம் கூட இருவருக்கும் ஒன்றாக வரும் படி வாங்கிக் கொள்வார்கள் ,சாப்பாட்டு நேரம்,ஓய்வு நேரம் ரெண்டு பேரையும் தனித்து பார்க்க முடியாது ,நிறைய பேசுவார்கள்,சிரிப்பார்கள்,அவர்களில் ஒருவர் என்னோடு பஸ்சில் வருபவர் ,அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம் என்றாலும் முறைத்துக் கொள்ளவும் மாட்டோம் காரணம் அவர் எங்களை விட சீனியர் என்பதும் தான் ,எனக்கு அந்த தோழிகள் இருவரையும் சேர்த்துப் பார்க்க பிடிக்கும்,இருவரும் வெவேறு இனம் ,மதம் அழகானவர்களும் கூட,ஆனால் ஒரு நாள் இரவு எங்கள் வீட்டுக் கதவு தட்டப் பட்டு ,கத்தல் கேட்கும்  வரைஎனக்குத் தெரியாது என்னோடு வரும் பெண்ணின் மற்றொரு முகம்,ஆம்,அந்த பெண் யாரோ ஒரு நபருடன் ஓடிப் போய் விட்டது  ,நான் பஸ்சில் அந்த பெண்ணோடு போவதால் எங்கள் வீட்டில் வந்து சத்தம் போட்ட்டனர் அந்த பெண்ணின் உறவினர்கள் ,எப்போதும் பாவம் ஓரிடம்,பழி ஓரிடம் தானே?ஒரு வழியாக அவர்கள் சென்றவுடன் அடுத்த நாள் காலை அலுவலகம் போன பின்பு தான் முழுக் கதையும் தெரிந்தது ,அவர் ஓடிப் போனது அந்த மற்றொரு தோழியின் காதலரோடு என்று ,தன தோழியின் காதலுக்கு தூது போன இவர் கொஞ்ச காலம் ஆனதும் அவரை கழற்றி விட்டு இவர் அவரை விரும்பி இருக்கிறார் ,பழகி இருக்கிறார் அந்த தோழிக்கு தெரியாமல் ஏனென்றால் அந்த நண்பி வீட்டில் அதிகம் கட்டுப்பாடு என்பதால் அவரால் அதிகம் வெளியில் செல்ல முடியாது ,பேச முடியாது இதை இவர் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு விட்டார் ...இந்த தோழியை அலுவலகத்தில் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது அவர் நிலை ...கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை லீவில் இருந்தார் ...மறுபடி அவரைப் பார்க்கும் போது புரிந்தது ,உண்மை அன்பு அவரை எந்த அளவுக்கு கொண்டு போய் விட்டுள்ளது என்று??ஆனால் ஓடிப் போன பெண்ணோ ,சிறிது காலம் கழித்து அந்த நபருடன் இதே ஊருக்கு மாற்றல் வாங்கி வந்து தனிக் குடித்தனம் செய்து கொண்டு இருந்தார் ..சந்தோஷமாக.....எனக்கு அவரைப் பார்க்கும் போது இன்னும் சிரிக்க கூடத் தோன்றுவது இல்லை ..

Thursday 15 August 2013

இன்று இந்திய சுதந்திர தினம் ..சிலருடைய பதிவுகளைப் பார்க்கையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது ,கொலையும்,கொள்ளையும்,கேடு கெட்ட அரசியல்  வாதிகளும்,சட்டங்களும் ,ஊழல்களும் ,பசியும் பஞ்சமும் எந்த நாட்டில் இல்லை ?இன்றைய நிலைக்கு நாமும் தெரிந்தோ,தெரியாமலோ ஒரு விதத்தில் காரணம் என்பதை எல்லோரும் சுலபமாக மறந்து நாட்டின் மீது பழி சுமத்துவது எந்த வகையில் நியாயம்?நாடு என்பதே நாம் தானே ,அனைத்து இயற்கை வளங்களும் அழிவதும் நம் மனித இனத்தால் தானே?எனக்கு எப்போதும் நான் என்றும் ஒரு இந்தியன் என்கிற பெருமை இருக்கும் ,அந்த நாளில் எங்கள் வீட்டிலும் ,நான் நினைக்கிறேன் கண்டிப்பாக நம் அனைவர் வீடுகளில்ருந்தும் யாரவது ஒருவர் (நம் மூதாதையர்)இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து இருந்திருப்பார் ,அதற்க்கு நாம் கொடுக்கும் மதிப்பு இது தானா?அந்த நாடு எனக்கு கல்வி கொடுத்தது ,எங்களை வளர்த்தது ,அந்த கல்வி,அந்த அனுபவம் தான் எங்களை இங்கு வாழ வைக்கிறது என்கிற நன்றி இப்போதும் உண்டு,ஒருசில நிகழ்வுகளை வைத்து நம் நாட்டை நாம் தாழ்வாக எண்ணலாமா?எல்லா துறைகளிலும் இன்று நம் இந்திய பிள்ளைகள் நன்கு செய்கின்றனர்,அனைத்து உலக  நாடுகளிலும் நம் இந்தியர்கள் மிகப் பெரிய பதவி வகிக்கின்றனர் ,இந்தியா இன்று மிகப் பெரிய அளவில்,மிக விரைவாக  முன்னேறிக் கொண்டு இருக்கும் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்று உலக நாடுகள் ஒருவித கலக்கத்தோடு கைகோர்க்க முன்வருகின்றனர் ,இந்தியாவை உற்றுப்பார்க்க துவங்கி உள்ளனர் இது எப்படி சாத்தியம்?இது நம்மால் தானே?நம் இந்திய  மக்களால் தானே?இங்கு சீனர்கள் வியந்து கேட்பார்கள் "எப்படி இந்தியர்கள் கணினி,கணக்கு,மருத்துவம்,சட்டம் ,கலைகள் என அனைத்துத் துறைகளிலும் மிக நன்றாக செய்கிறார்கள் என்று?"இங்கும் மிக பெரிய பதவியில் இந்தியர்கள் இருப்பார்கள்,இருக்கிறார்கள்,அங்கிருந்து விட்டு இப்போது நான் இந்திய செல்லும் போதெல்லாம் வியந்து போவது உண்டு விமான நிலையம்,தொலைத் தொடர்பு,வாகனங்களின் வசதி,பெருக்கம்,ஆங்கிலப் புலமை,என்று ஒவ்வொரு விதத்திலும் மாற்றம் காண முடிகிறது,சுதந்திர தினத்தை நினைத்து பெருமைப் படவில்லை என்றாலும் சிறுமைப் படுத்தாமல் இருக்கலாம் தானே?இருப்போம்,..அட்லீஸ்ட் 100000 ஊழல்கள் இருந்தாலும் கண்டிப்பாக 10 நல்ல மனிதர்கள் ,உள்ளங்கள்,இன்றும் நம்மிடையே உண்டு அவர்களுக்காக .....வாழ்க பாரதம் .....

Tuesday 13 August 2013

புத்தர் எப்போதும்,இப்போதும் பிடித்தமானவர்,வியப்பிற்க்குரியவர்,அவரைப் பற்றி படித்த பிறகு அம்மாவிடம் அதிகம் கதைகள் அவரைப் பற்றிக் கேட்பேன்,அம்மா தமிழ் ஆசிரியை ,அதிக விஷய ஞானம் உள்ளவர் ,அதனால் அனுபவங்கள் வழி எப்போதும் எங்களுக்கு மனிதர்களைப் புரிய வைப்பார் ,எப்படி இந்த அமைதி?எப்படி இந்த தெளிவு?எப்படி இந்த விட்டு விலகுதல்?என்று எல்லா விதத்திலும் வியந்து போவது உண்டு புத்தரைப் பற்றி கேட்ட பொழுது ...புத்த பிக்குகளை கண்டால் தேடி ஒடிச் சென்று வணங்குவோம்,இங்கும் சில இந்து கோவில்களில் புத்தர் சிலைகள் உண்டு ,மத பேதம் இன்றி அனைவரும் பத்தி ஏற்றி வைத்து வணங்குவார்கள் ...இங்குள்ள சீனர்களில் அதிகம் பேர் புத்த மதம் தழுவியவர்கள் ...###புத்த பிக்குகள் கலவரத்தில் ஈடுபட்டனர்,புத்த பிக்குகள் கொன்றனர் என்றெல்லாம் கேட்கும் போது பரிதாபம் வருகிறது புத்தரை நினைத்து ,ரெண்டு நாட்களுக்கு முன் கேட்ட செய்தி இலங்கையில் புத்த பிக்குகள் இஸ்லாமியர்கள் அவர்கள் தங்கள் மசூதியில் பிரார்த்தனையில் ஈடு பட்டிருந்த போது அவர்களை துன்புறுத்தி கலவர்,வன்முறை என்று கேட்ட போது இதை விட நல்ல  படம் சொல்ல முடியாது சொல்ல வேண்டிய விஷயங்களை என்று தோன்றியது ......
இன்று நானும் என் பெண்ணும் வெளில் சென்று இருந்து இருந்தோம்,என் பெண் பஸ் தற்போது எங்கு வந்து கொண்டு இருக்கிறது ,எங்கள் நிறுத்தத்திற்கு எப்போது வரும் என்று தன்மொபைல் IRIS வழி செக் பண்ணியது ,வர சிறு நேரம் ஆகும் அதாவது ஒரு 10 டு 13 minutes என்றவுடன் ,உடனே OMG ...so  late ..why  this  sbs transit  services are  nowadys  poor ??என்று உடனே tweet செய்ய துவங்கி விட்டது??இதுதான் தற்போதைய பிள்ளைகள் ,அவர்கள் வளரும் சூழ்நிலை அப்படி அதனால் அவர்களை நாம் குறை கூற முடியாது ,எனக்கு என் கல்லூரி காலம் நினைவுக்கு வந்தது ,அப்போது காலையில் 8 மணிக்கு பஸ் பிடித்தால் தான் 9 மணிக்குள் collegekkul நுழைய முடியும் ,இல்லையென்றால் ஒருபெரிய கும்பல் சேர்ந்து மிகவும் கஷ்டமாக ஆகிவிடும்,மொத்தமாக மதுரையின் அனைத்து கல்லூரி பிள்ளைகளும் கோரிப்பாளையம் வந்துதான் மாறவேண்டும் ,அப்போதெல்லாம் இப்போது உள்ளது போல் ஆட்டோக்கள் கிடையாது,fatimacollege ,ldc ,meenakshicollege ,yaadhava ,mannarcollege ,lawcollege ,medical  college ,madurai  college ,என்று அனைத்து students +professors என்று ஒரு பெரிய திருவிழா போல் இருக்கும் அப்போது ,நீந்திப் போவதற்குள் ஒரு பெரிய சாதனையாக இருக்கும் எங்களுக்கு ,கல்லூரிக்குள் நுழையும் போது,எதோ ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று விட்டது போல்தான் போவோம்,(அவ்வளவு வேர்த்து,களைத்து)..எங்கள் பஸ் கண்டக்டர் வேறு ரொம்ப அடாவடி பண்ணுவார்,அவருக்கு பிடித்த பெண் எங்கள் ஸ்டாப்பில் நிற்க வில்லை என்றால் உடனே doublewhistle கொடுத்து விடுவார்,அவ்வளவுதான் பஸ் அங்கு நிற்காது ,complaint  கொடுப்போம் ,உடனே அடுத்த நாள் மட்டும் எவ்வளவு மெதுவாக ஒட்டிச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாக ஒட்டிச் செல்வார்,இல்லையென்றால் வேண்டுமென்றே பஸ் நிறுத்தம் தள்ளி நிறுத்தி எங்கள் அனைவரையும் ஓடிவந்து ஏறும்படி செய்வார்,இந்த பிரச்சனையை சமாளிக்க அந்த பெண்ணை தாஜா செய்து வைத்துக் கொள்வோம்,அந்த அக்காவின் bagai நாங்கள் வாங்கி வைத்துக் கொள்வது ,அவங்க உட்கார வழி செய்வது,sweet  வாங்கி கொடுப்பது ,எப்போது லீவ் என்று கேட்டு வைத்துக் கொண்டு அன்று மட்டும் போகும் பஸ்சில் ஏறி திரும்ப அதே ரூட்டில் காலேஜ் போவது??வேறு வழி???என்ன ஒரு ஆறுதலான விஷயம் முன்பு இப்போது இருப்பது போல் விஷமிகள் இல்லை,எல்லோரும் கொஞ்சம் வீட்டுக்கு பயந்தும்,படிக்க வேண்டும் என்கிற ஒரு முனைப்போடும் இருந்தகாலம்,ஓரளவிற்கு எல்லோரும் உணமையான நட்போடு,ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட காலம் ......##இப்போது எல்லோரும்  கொஞ்சம் பணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அதனாலோ என்னவோ இருபாலாரும்  ஒருவித உள்நோக்கம் கொண்ட நட்போடு தான் பழகுகிறார்கள் ...பிள்ளைகளையும் குற்றம் சொல்ல முடியாது அவர்கள் இருக்கும் உலகம்,அவர்களை சுற்றி நடக்கும் விஷயம் அப்படி....மதம்,இனம்,மொழி ,ஊர்,சாதி என்று எல்லாவழிகளிலும் ஒருமிகைப் படுத்தல் தற்போதுள்ள இளையர்களிடம் திணிக்கப் படுகிறது ...அதன் விளைவு ..ஒரு நிலையற்ற மனம்,நிலையற்ற தன்மை,தவறு என்று தெரிந்தாலும் அதையும் எதோ ஒரு வகையில்  ஒப்பீடு செய்து கொண்டு அதன் வழி செல்கிறார்கள் ......##வினை விதைத்தால் வினை தானே அறுவடை செய்யவும் முடியும்??

Monday 12 August 2013

இன்று என் சீன நண்பரும் அவரது துணைவியாரையும் சந்திக்க நேர்ந்தது ,பேசிக் கொண்டே இருந்த போது விடுமுறை காலம் பற்றி பேச்சு வந்தது அவர்கள் இருவரும் எப்போதும் விடுமுறைக்கு இந்தியா செல்பவர்கள் ,அங்கு அவர்களுக்கு தாஜ்மஹால் மிகப் பிடித்த இடம் ,சில உணவு வகைகள் மிகப் பிடிக்கும் ,இம்முறை எங்கு என்றேன் ,சில நொடிகள் என்னைப் பார்த்து விட்டு சொன்னார் ,நாங்கள் இம்முறை இந்திய செல்வதற்காக என்று டிக்கெட் புக் பண்ணி வைத்ததை கான்செல் பண்ணி விட்டோம் ,அங்கு நடக்கும் rape cases என் மனைவியை மிகவும் பயமுறித்தி விட்டது ,இது போல் நாங்கள் மட்டுமல்ல எங்கள் குழுவில் உள்ள 10 பேரும் பதிவை கான்செல் பண்ணி விட்டு பதிலாக ஹாங்காங் போகிறோம் என்றார்,என் அங்கு இன்னும் அந்த நபரை தண்டிக்கவில்லை?குற்றம் இன்னும் அங்கு நிரூபிக்க படவில்லையா?என்றும் கேட்டார் ,இங்கெல்லாம் ஒரு நபர் குற்றவாளி என்று நிரூபிக்க பட்ட உடன் அவருக்குரிய தண்டனை நிறைவேற்றப் பட்டு விடும் ,அங்கு எதனால் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அவர்கள் தண்டிக்கப் படவில்லை??உண்மையில் எனக்கு இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை ,இது போல் சில நேரடிக் கேள்விகள் வரும் போது வெட்கத்தோடு தலை குனிவது அல்லது அமைதியாக இருப்பதைத் தவிர என்ன என்னால்/நம்மால் செய்து விட முடியும்????
நமக்குத் தெரியும் எய்தவன் எங்கோ இருக்க அம்பை நொந்து என்ன பயன்??அவர்களுக்கு விளக்கம் சொல்வதற்கு பதில் அமைதி காப்பது இந்த இடத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்குத் தோன்றியது .....

Friday 9 August 2013

இன்று சிங்கப்பூரின் 48வது தேசிய தினம் ,ஒரு மிக சாதாரணமான மீன் பிடி கிராமமாக இருந்த ஒரு சிறு கடுகின் அளவு பரப்பளவு கொண்ட நாடு ,தீவு இன்று உலக அளவில் போட்டித்தன்மை மிக்கதாய் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாய் அமெரிக்காவின் dollarskku ஈடு கொடுத்துக் கொண்டு இருப்பது எப்போதும் எனக்கு மலைப்பாக இருக்கும் ,ஒரு தனி மனிதனின் சாதனை ,உழைப்பு ,அசைக்க முடியாத நம்பிக்கையின் சின்னம் சிங்கபுரின்  தந்தை என்று அழைக்கப்படும் உயர் திரு லீ குவான் யு அவர்கள் ,இங்கு குற்றங்கள் குறைவு என்பதற்காக குற்றங்களே இல்லை என்று பொருள் படாது என்பது இந்த நாட்டின் தாரக மந்திரம் ,ஒரு தப்பு முளைக்கும் போதே ஒரு கை அல்ல ரெண்டு கை அல்ல 100 கைகள் கொண்டு கிள்ளி எறியப்படும் சட்டம் ,சமமான அளவு உரிமை ,திறமைக்கு முன்னுரிமை எங்கும் எதிலும் கடை பிடிக்கப்படும் ஒழுங்குமுறை ,மிக சரியான அளவு திட்டமிடுதல் செயல்படுத்துதல் இவையெல்லாம் காரணம் என்று சொல்லலாம் ,சிங்கப்பூரில் இருந்து பிழைக்க முடியாதவன் எங்கும் பிழைக்க முடியாது என்று நம்மவர்கள் வேடிக்கையாக சொல்வது உண்டு ,உண்மை உழைத்தால் ,படித்தால் கண்டிப்பாக முன்னேற முடியும் குடும்பத்தாரின் புரிந்துணர்வு மிக முக்கியம் இல்லையென்றால் குடும்ப வாழ்வு கொஞ்சம் சிரமம் என்று இங்குள்ள சில இளையர்கள் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள் ,அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை தற்போதைய சிங்கப்பூரின் பிரச்சனையும் அதுதான் அரசாங்கமும் அதற்க்கென நிறைய சலுகை திட்டங்களையும் அறிவித்து உள்ளார்கள் இங்கு அனைத்து ஆண் பிள்ளைகளும் ,2 வருடங்கள் தேசிய சேவை செய்ய வேண்டும் ,அது கட்டாயம் ,இந்தியாவிலும் அது போல் கொண்டு வந்தால் 10 பிள்ளைகள் கெட்டுப் போனாலும்2 பிள்ளையாவது உண்மையான நாட்டுப் பற்றோடு இருக்குமோ என்று எண்ணிக் கொள்வது உண்டு ...திரு லீ குவான் யு அவர்களின் மகன் திரு லீ சியாங் லூங் அவர்கள் தான் தற்போதைய பிரதமர் ,படிப்பிலும் திறமையிலும் ,முடிவு எடுப்பதிலும் ,மக்களோடு பழகுவதிலும் அப்பாவை விட அதிகமாய் பேசப்படுபவர் ,நேசிக்கப் படுபவர் ...குடும்ப அரசியல் என்று சொல்லப் பட்டாலும் சிறுதும் குறை காண முடியாத ,மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்ட அரசு என்றும் சொல்லலாம் ....

SINGAI NAADU (Official Music Video)

Thursday 8 August 2013

என் நெருங்கிய தோழி மிகவும் வருத்தப்பட்டார் தங்களை புலம் பெயந்தவர்கள் ,அகதிகள்  என்று மற்றவர்களால் அழைக்கப்படுகிறோம் என்று ,நான் யோசித்தேன் எங்களைப் போன்றவர்களுக்கு என்ன பெயர்??பிறந்தது ,வளர்ந்தது ,படித்தது ,மணம் செய்து கொண்டது அனைத்தும் ஒரு நாடு,வளர்சிக்காக (பணத்திற்காக) வந்தது ஒரு நாடு ,முதலில் நம் பிரிவுக்காக வருத்தபப்டும் உறவுகள் பின்னர் பணம் என்கிற விஷயத்திற்காக மட்டும் நம்மை நினைப்பார்கள்,நாம் இங்கு இருந்து கொண்டு அங்கு இருப்பவர்களை வளர்ப்போம் ,விடுமுறைக்கு சொந்த நாட்டிற்கு போவோம் எவ்வளவோ ஆசைகளை மனதில் சுமந்து ,அங்கோ நீங்கள் கொண்டு வரும் பொருள் பொறுத்து மதிக்கப் படுவீர்கள் ,எப்போதோ வந்து தங்கப் போகும் ஆசையில் நாங்கள் அங்கு அவர்கள் வசிக்க வீடுகள் வாங்குவோம்,சில சமயங்களில் வீட்டு பெயர்கள் கூட அவர்கள் பெயர்களில் பதிவு செய்து ஏமாந்து போனவர்கள் கதையும் உண்டு ,பிள்ளைகள் இந்த நாட்டில் படித்து வளர்வார்கள் ,ஒரு கால கட்டத்தில் அங்கு செல்லவே பிரியப் பட மாட்டார்கள் ,உறவுகள் தரும் ஏமாற்றம்,பிள்ளைகளின் வளர்சிக்காக  இங்கு நம்மை நிரந்தரமாக தங்க முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ள வைத்து விடும் ,இங்கு பிறந்தவர்களோ நம்மை போட்டியாக நினைக்க துவங்கி விடுவார்கள் ஒரு கால கட்டத்தில் ,நம்மால் முழுவதும் மாற முடியாமல் ,அங்கு இருப்பவர்களை மறக்கவும் முடியாமல் ஒரு வாழ்க்கை இங்கு வந்து தங்கி விட்ட அனைவருக்கும் ..ஒருமுறை இந்த நாட்டின் பிரதமர் சொன்னார் ""இங்கு வந்து வீடுகளில் முதலீடு செய்து விட்டு வெளி நாடுகளில் வசிக்கும் அனைவரும் ,இந்த நாட்டின் காற்றைத்தான் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று தான் சொல்வேன் "என்றார் ,உண்மைதானே எங்கள் நிலையும் அது போலத் தான் என்பேன் நான் ,நீங்கள் போரின் காரணமாக உங்கள் நாட்டில் இருந்து வெளியேறியவர்கள் ,நாங்கள் விருப்பப் பட்டு வெளியேறி "திரிசங்கு சொர்க்கத்தில் வசிப்பவர்கள் "அதனால் யாரும் யாரையும் சொல்வதற்கு அருகதை அற்றவர்கள் பெண்ணே என்றேன்  ....
ரம்ஜான் என்றம் பிரியாணியோடு நினைவுக்கு வருபவர் புது ராவுத்தர் ,எங்கள் வீட்டிற்கு மிக அருகில் இருந்தவர்கள் ,மிகவும் எழைப்பட்டவர்கள் ,பாட்டி மட்டும் தான் ,பிள்ளைகள் 4,பாட்டி மிக அழகாக இருப்பார்,யாரும் அவர்கள் வீட்டிற்கு வர மாட்டார்கள் ,எப்போதும் பாட்டியும் எங்கள் வீட்டில் தான் இருப்பார்,உணவுப் பொருட்கள்,பணம் என்று அவருக்கு உதவவும்  யாரும் இல்லாமல் இருந்தார் ரம்ஜான் தீபாவளி என்று  அன்று பண்டிகைகளில் வித்தியாசம் தெரிந்தது இல்லை அம்மா ஒருமுறை சொன்னார் ""பாட்டி இஸ்லாமிய மதம் அவர் கணவர் வேறு மதம்,அவர் பெரிய பணக்காரர்,பாட்டியின் அழகில் மயங்கி இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே குதிரையில் பாட்டியை தூக்கி சென்று மணம் செய்து கொண்டாராம் அவரும்பாட்டியின் மதம் மாறினார் ஆனால் யாரும் ,அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கவில்லை ,மாறாக ஊரை விட்டே வெளியேற்றி விட்டனராம் ,அதனால் தான் அவர்கள் வீட்டிற்கு யாரும் வருவதில்லை ,அவர் கணவரின் அப்பாவும் தன அனைத்து சொத்துகளையும் தான தர்மத்திற்கு எழுதி வைத்து விட்டார் ,அதனால் தான் அவர் இறந்த பிறகு பாட்டி இவ்வளவு கஷ்டப் படுகிறார் என்றார்"பிள்ளைகள் படித்து வேலையில் அமர்ந்தவுடன் அவர்கள் மதத்தினர் பெண் கொடுத்தனர் அவரது பிள்ளைகளுக்கு ,இன்று அவரது பிள்ளைகள் நன்கு அறியப்படும் பணக்காரர்கள் ,ஆனால் பாட்டி மட்டும் கடைசி வரை வறுமையில் அங்கீகாரம் கிடைக்காமல் தான் மறைந்தார் ,பிள்ளைகளின் தொலை பேசிக்கு நாம் அழைத்தால் முதலில் அவர்கள் மத பிரார்த்தனை வரிகள் சொல்லி விட்டே பேச ஆரம்பிப்பார்கள் ....

Tuesday 6 August 2013

உறவுகள் --உறவுகளோடு வாழ்ந்து ,உறவுகளோடு கொண்டாடி ,உறவுகளுக்கிடையே மரித்துப் போக எல்லோருக்கும் ஆசைதான் ,எத்தனை பேருக்கு அது நிராசையாகப் போய்விடுகிறது என்பது புதிர் ....
நாம் ஒரு வேலைக்குப் பொய் சேரும் போது நம்மோடு வந்து சேரும் அனைவரும் நம்மோடு இணைந்து ஒரு நண்பர்கள் வட்டம் அமைந்து விடுவது உண்டு ,அது போல் தான் எனக்கும் ,எங்கள் வட்டத்தில் 5 பேர் உண்டு ,அதில் ஒருத்தி தான் சுகுணா என்று வைத்துக் கொள்வோம்,அழகாக இருப்பாள் ,நன்கு பட்டுப் பாடுவாள் ,கொஞ்சம் ஏழைக் குடும்பம் ஆனால் அது தெரியாவண்ணம் நேர்த்தியாக உடுத்தி வருவாள் ,ஒரு நாள் மிக சந்தோஷமாக அவளுக்கு திருமணம் என்றும் அதுவும் அவள் மாமா பையனுடன் என்றும் சொன்னாள்,திருமணம் இனிதாய் நடந்தது ,செலவு முழுக்க மாமா ஏற்றுக் கொண்டார் என்றாள்,எங்கள் அனைவருக்கும் மிகவும் மதிப்பு அவர் மாமா மேல் வந்தது ,மணம் முடித்த கையோடு அவள் கணவர் ஊருக்கு  மாற்றலாகிப் போனாள்,மிக மிக சந்தோஷமாக இருப்பதாக எங்களுக்கு கடிதம் எழுதினாள்,எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி எனெற்றால் எங்கள் வட்டத்தில் முதலில்  மணம் செய்து கொண்டவள் அவள் ஒருமாதம் முதல் 45 நாட்கள் கடந்தது ,திடீரென்று ஒரு நாள் அவள் கணவர் இறந்த செய்தி வந்தது ,அனைவரும் திகைத்துப் போனோம் ,அங்கு சென்ற போது அவள் கதறல் மிகவும் பரிதாபமாக இருந்தது ,அதை விட உண்மை தெரிந்த போது எங்கள் அலுவலகமே கொதித்துப் போனது ,அந்த மாமா மகன் ஒரு இருதைய நோய் உடையவர் ,அவருக்கு திருமணம் செய்யக் கூடாது என்று ஏற்க்கனவே மருத்துவர்கள் அவரது தாய் தந்தையிடம் சொல்லியும் அவர்கள் கேட்காமல் சொந்த தங்கையின் வறுமை நிலையைப் பயன்படுத்தி தந்தையின் மகளை மகனுக்கு மணம் முடித்து வைத்துள்ளனர் ,இது அவர் மகனுக்கே தெரியாது என்றும் சொன்னார்கள் ,மிக வேதனையாக  இருந்தது அவள்  நிலை ,யாரால் என்ன செய்துவிட முடியும்?ஒரே வாரத்தில் அவளுக்கு மறுபடியும் நாங்கள் இருந்த அவள் அம்மா ஊருக்கு மாற்றல் வாங்கினார்கள் ,ஒருமாத விடுப்பிற்கு பிறகு வேலைக்கு வந்தாள்,சொன்ன செய்தியோ அதிர்ச்சி ,தான் 25 நாட்கள் கர்ப்பம் ஆனால்  கலைக்க  மறுத்து விட்டாள்,அவளை மணம் முடிக்க எத்தனையோ பேர் வந்தும் மறுத்து விட்டாள் அவள் மகன் தற்போது ஒரு engineer ,ஒரு குழந்தைக்கு தகப்பன் ,இன்றும் அவளைப் பார்க்கையில் ஒரு சோகம் ,வருத்தம் மனதிற்குள் வரும் -----சொந்தங்கள் எப்படி எல்லாம் சுயநல வாதியாக இருக்கிறார்கள் ?அவர்களது சுயநலம் ஒரு ஏழைப் பெண்ணின் வாழ்வில் எப்படி விளையாடி விட்டது?45 நாட்கள் மட்டுமே வாழ்ந்த வாழ்க்கைக்கு அவள் வாழ் நாள் முழுக்க இன்றும் கூட வேலை செய்கிறாள்  ,கேட்டால் சொல்வாள் ""அவரை நான் முழு மனதாக நேசித்தேன் ,அவரும் உண்மையாக இருந்தார் அந்த கடைசி  நிமிடம் கூட என் மடி மீது என் கைபிடித்தபடி தான் அவர் உயிர் பிரிந்தது ,அவருக்கு தெரிந்து இருந்தால் இந்த மணம் நடக்க ஒத்துக் கொண்டு இருக்க மாட்டார் ,சாவின் இறுதி வரை அவருக்கு தெரியாது ,அப்படி இருக்க நான் ஏன் அவரை மறக்க வேண்டும்?   அவர் நினைவோடு சந்தோஷமாக இருக்கிறேன் என்பாள்"பெண்களின் மணம் பெண்களுக்கே புரியாத புதிர் தான் போல் இருக்கிறது ,அன்பு செலுத்தவும் ,அன்பால் வெல்லவும் அவளால் மட்டுமே முடியும் என்பது எங்கள் அனைவரின் கருத்தாக இருந்தது  அவளைப் பார்த்த பிறகு .....

Monday 5 August 2013

இங்கு கடந்த வாரம் நடந்த நிகழ்வு ----இங்குள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி (பெண்கள்) மாணவிகள் இருவர் பள்ளிக்கு மொட்டைத் தலையோடு வந்ததால் பள்ளி ஆசிரியர் அவர்களை வகுப்பிற்குள் அனுமதிக்க மறுத்து அலுவலக அறையில் இரண்டு வகுப்புகள் முடியும் வரை அமர வைத்து விட்டார் ,பின்பு பள்ளியின் பிற மாணவிகள் அனைவரும் சேர்ந்து பணம் போட்டு ,அவர்கள் இருவர்க்கும் விக் வாங்கித்தந்தனர் ,அதன் பிறகு அவர்கள் வகுப்பிற்கு சென்றனர் ...இதுதான் செய்தி  நடந்தது என்னவென்றால் கடந்த சனிக்கிழமை அன்று இங்குள்ள சில பள்ளி மாணவிகள் கான்செர் விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்து கொண்டு அவர்கள் தங்கள் தலை முடியை மழித்துக் கொண்டனர் ,இந்த பெண்கள் பள்ளி மாணவிகள் அந்த இயக்கத்தில் தாங்களாகவே கலந்து கொண்டு ஆசிரியரிடம் தலை முடியை மழித்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளனர் ,ஆசிரியர் விக் வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதாக இருந்தால் செய்துகொள்ளலாம் என்று அனுமதி வழங்கி உள்ளார் ,எனெற்றால் அந்த பள்ளியில் அதற்க்கு (மொட்டைத் தலைக்கு) அனுமதி இல்லை ,இவர்களும் சம்மதித்துள்ளனர் ,5 மாணவிகள் தலை முடியை மழித்துக் கொண்டதில் இவர்கள் இருவர் மட்டும் விக் அணியாமல் பள்ளி வந்தது தான் பிரச்சனை ஆகி விட்டது ,மாணவிகள் விக் அணிந்தால் தலையில் அரிப்பு வந்து விடுகிறதுஎன்று சொல்கிறார்கள் ,அதற்க்கு ஆசிரியர் அப்படியென்றால் நீங்கள் மருத்துவரிடம் அதற்க்கான சான்றிதல் வாங்க வேண்டும் என்கிறார் ,பல தரப்பட்ட கருத்துகள் ,சிலர் இது ஒரு நல்ல விஷயம் தானே இதற்க்கு இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா?என்கிறார்கள் ,சிலர் மாணவிகள் முதலில் சத்தியம் செய்து உள்ளனர் ஆசிரியரிடம் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்றும்,சிலர் பள்ளி மாணவிகள் இது போல் விஷயங்களில் பள்ளிப் படிப்பை முடித்த பின் செய்ய வேண்டும் என்றும்,இறுதியில் இங்குள்ள கல்வி அமைச்சு "மாணவிகள் அவர்கள் தம் பள்ளிக் கொள்கைகளையும் ,சட்ட திட்டங்களையும் மதித்து பின்பற்ற வேண்டும் "என்று அறிவுறுத்தி உள்ளது
 இன்று ஒரு மிக உண்மையான மனிதர்கள்,காதலர்கள் பற்றி சொல்லத் தோன்றுகிறது ,எனது உறவினரும் கூட,காதல்,அன்பு,அடர்த்தியான நேசம் எல்லாவற்றுக்கும் பெயர் இவர்கள் மட்டும் தான் என்று எனக்குத் தோன்றும் ,இன்று இருவரும் உயிரோடு இல்லை ...பெயர்களை   சொல்லி  இனம் காட்ட விரும்பவில்லை ....பெண் தாதி,ஆண் மருத்துவர் இருவரும் கல்லூரி படிப்பு முதல் காதல் செய்தனர் ,ஆண் பணக்காரர்,ஜாதி வேறு வேறு ,ஆணின் அம்மா சம்மதிக்கவில்லை ,ஆணுக்கு சிறுவயதிலேயே அப்பா தவறி விட்டார் ,அம்மா சம்மதிக்க மறுத்ததால் அவரைக் கஷ்டப் படுத்த இருவரும் விரும்பவில்லை ,பிரிந்தனர் ,அவர் அமெரிக்க சென்று விட்டார் ,பெண் chiristhava மதம் மாறி .தமிழ் நாட்டிலுள்ள ஒரு மலைப்பிரதேச சிற்றூரில் அங்குள்ள மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார் ,காலம் கடந்தது,பெண்ணுக்கு 38வது வயதில் கற்பபையில் கான்செர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு எடுத்து விட்டார்கள் ,40 வது வயதில் ஒரு நாள் அமெரிக்க சென்ற அந்த ஆண் திரும்ப வந்தார் அவர் அம்மா மறைவுக்கு ,பிறகு இந்த பெண் நண்பர்,காதலியைத் தேடிக் கண்டுபிடித்தார் ,திருமணம் செய்து  கொண்டார் ,அதோடு அவரும் அதே கிராமத்தில் அவரோடு மதம் மாறி அங்கு சேவை செய்தார் ,பெண் நபரின் தம்பி மகளை தத்து எடுத்து வளர்த்தனர் ,படிக்க வைத்தனர்,அவள் தற்போது அதே கிராமத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ,இரண்டு பெண்பிள்ளைகளின் அம்மா ,அவர்கள் இருவரும் அந்த பெண்ணிடம் சிறு வயது முதல் தாங்கள் வளர்ப்பு பெற்றோர் ,என்று உண்மை சொல்லித் தான் வளர்த்து வந்தனர் ...வளர்கிறோம் என்பதற்காக அவளிடம் அவர்கள் இருவரும் பொய் சொன்னதில்லை ,அவளுடைய மற்ற சகோதரிகளை விட இந்த பெண் மிக நன்றாக இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும் .......கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் இருவரும் ஒருவர் பின் ஒருவராக அதிகம் கஷ்டப் படாமல் ,மரணம் அடைந்தனர் .....காதல் என்றாலே கெட்ட வார்த்தை என்கிற பின்னணியிலிருந்து வந்த எனக்கு இவர்களைப் பார்க்கும் போது தான் அது ஒரு உண்மையான விஷயம் ,அது அனைவருக்கும் சாத்தியமும் இல்லை என்று எண்ணம் தோன்றியது .....

Friday 2 August 2013

மேகங்கள் கடந்து போவது போல் நாட்களும் மனிதர்களும் நம்மைக் கடந்து செல்கின்றனர் ,நாமும் கடந்து வருகிறோம் என்றாலும் சிலர், சிலர் மட்டும் காலங்கள் கடந்தும் தம் நினைவை நம்மிடம் பதிவு செய்து விடுவது உண்டு ,அப்படி ஒருவர் என் ஒவ்வொரு பயணத்திலும் என்னை நினைக்க வைத்தவர் ,வைத்துக் கொண்டும் இருப்பவர் நன்றியோடு ..
குற்றங்கள் இங்கும் உண்டு ,அதற்க்கான தண்டனையும் உடனடியாக உண்டுவயது ,இனம் நாடு என்று  எந்தவித பாரபட்சம் இல்லாமல் ..இது நான் சிங்கப்பூரில் கண்ட உண்மை ..குற்றம் நிரூபிக்கபட்ட உடன் தண்டனை நிறைவேறும் பிறகு முழு செய்தியும் வெளியில் வரும் ,வந்த முதல் ஆண்டே ஒரு மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட செய்தி கேட்டு
கொஞ்சம் ஆடித் தான் போனேன் ...
நானும் என் பிள்ளைகளும் மட்டும் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் ...வரும் நாள் இது நடந்து ஒரு 10 ஆண்டுகள் ஆகி விட்டது ,நான் எப்போதும் பயணத்தின் போது குறிப்பிடப்பட்டிருக்கும் அளவிற்கு உள்ளாகவே luggage
எடுத்துச் செல்வீது உண்டு இங்கு அனைத்துப் பொருட்களும் கிடைப்பதால் வீணாக தூக்கிக் கொண்டு வருவதை தவிர்த்து விடுவேன் ,அப்படித்தான் அன்றும் checkin பண்ணுவதற்கு நின்று கொண்டு இருந்தபோது ஒரு பெண்மணி நடுத்தர வயது என்னிடம் வந்து தானும் சிங்கப்பூர் வருவதாகவும் தன luggageil ஒரு mixie மட்டும் நான் என் luggageodu போட்டு விடுகிறேன் என்று கொஞ்சம் கெஞ்சினார் சரி ஒரே ஊர்ர்க்காரர் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்து விட்டு என் luggageodu வைத்து விட்டார் ,என் முறை வரும் போது என்னை உள்ளிருந்து ஒரு உயர் அதிகாரி அழைப்பதாகச் சொன்னார்கள் ,போனேன் கொஞ்சம் பயம் கலந்த ஆச்சரியம் என்னவோ எதோ என்று தான் அவர் ""அம்மா ,நீங்கள் என் மகள் போல் இருப்பதால் சொல்கிறேன் இந்த luggage எடுக்க வேண்டாம் உங்களுக்கு தெரியாது இதில் என்ன இருக்கிறது என்று இல்லையா?அவர் சொன்னதை வைத்து நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டாம் ,எங்கு எப்போது யார் எதைக் கடத்துவார்கள் என்று கண்டு பிடிப்பதும் ,நம்புவதும் கஷ்டம் ,அவர் mixiein உள்ளே ஏதாவது வைத்து இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்??நீங்கள் செல்வதோ சிங்கப்பூர் ,மிகக் கடுமையான சட்டம் உள்ள நாடு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ,உங்களைப் பார்த்தல் நீங்கள் தப்பு செய்யமாட்டீர்கள் ..என்று இந்தியாவில்நம்புவார்கள் ,ஆனால் அங்கு எந்த ஒரு நாட்டு வேண்டுதலும் எடுபடாது "என்று சொல்லி என்னோடு வந்து அந்த பெண்ணின் luggageai மட்டும் எடுத்து அவரே முடியாது என்று சொல்லி அந்த பெண்ணிடம் திருப்பிக் கொடுத்து விட்டார் ...இன்று கூட ஒரு செய்தி நேற்று மலேசியா ஆடவர் இருவர் அவர்களது வாகனத்தில் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் வைத்து singaporekkul கடத்த  இருந்ததாக இங்கு கைது .குற்றம் நிருபிக்கப் பட்டால் மரண தண்டனை என்றார்கள் இன்றும் அவரை ,அந்த உயர் அதிகாரியை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன் ....####நல்ல உள்ளங்களும் ,மனிதர்களும் எங்கும் உண்டு நம் கண்களில் படுவது குறைவு அவ்வளவுதான் ....

Thursday 1 August 2013

இன்று தாதியர் தினம் ...எனக்கு எப்போதும் நினைவுக்கு வருபவர் பூக்கார பொன்னம்மா,கிட்டத்தட்ட 8 வருடங்கள் பழக்கம் ,திருச்சி மாவட்டம் பக்கம் ஒரு கிராமம்  சொந்த ஊர் ,தினமும் இரவு 8 மணிக்கு எங்கள் வீட்டிற்கு பூ கொண்டு வருவார் ,ஒரு நாள் மிகவும் கோபம் அடைந்து இனிமேல் பூ வேண்டாம் என்று சொன்ன போது ,தன் நிலை சொல்லத் துவங்கினார் """எனக்கு தம்பியை மாப்பிள்ளை என்று சொல்லி  விட்டு ,படுத்த படுக்கையில் கிடந்த அண்ணனின் கையையைப் பிடித்து என் கழுத்தில் தாலி கட்டினார்கள் ,பின்பு தான் தெரிந்தது ,அண்ணன் பிறவியிலேயே மூளை வளர்ச்சி இல்லாதவர்,நடமாட முடியாதவர்,பேச முடியாதவர் என்பது ,இவர் இப்படி இருந்தால் தம்பியை யாரும் மணமுடிக்க வரமாட்டார்கள் என்பதால் ஏழையான என்னை என் அப்பா வாங்கி இருந்த கடனுக்காக இவருக்கு இல்லை இதுக்கு கட்டி வைத்து விட்டாரகள் வந்த அன்றே எனக்கும் இவருக்கும் ஒரு தனி ரூம் வீட்டுக்கு ஒதுக்குப் புறத்தில் கொடுத்துள்ளார்கள் நான் இவர்கள் வயக்காட்டில் வேலை செய்தால் தான் எனக்கு சாப்பாடு மற்ற என் செலவுகளையெல்லாம் நான் தான் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் நான் இருக்கும் உடல் நிலையில் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது அதனால் தான் பூ விற்கிறேன் முதலில் அழுதேன் இந்த என் புருஷனை அடித்தேன் பிறகு எனக்கு மிகவும் பாவமாக இருந்தது இந்த ஆளைப் பார்க்க அடித்தாலும் அழுகாது அனால் கண்களில் இருந்து கண்ணீரா கொட்டும் பசித்தாலும் கேட்கத் தெரியாது நாமாக பார்த்து சாப்பாடு ஊட்ட வேண்டும்,குளிக்க வைத்து மலம்,சிறுநீர் எடுப்பது முதல் நான் தான் செய்ய வேண்டும் ,இவர் அம்மா சொந்த அம்மா தான் ஆனாலும் இந்த பக்கம் கூட வந்து எட்டிப் பார்க்கமாட்டார்கள் யாரோ ஜோசியக்காரன் சொன்னதால் இவரை கொல்லாமல்விட்டு விட்டார்களாம் முதலில் எனக்கு எங்காவது ஓடி போய் விடலாம் ,என்று தோன்றியது ,இல்லை சில சமயம் செத்துப்  போய் விடலாம் என்று தோன்றியது பிறகு இந்த ஆளை நினைக்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கும் என் தலை விதி இப்படி இருக்கும் போது இந்த ஜீவனை என்ன சொல்ல முடியும்?எனக்கு வருடம் செல்ல செல்ல இவர் மேல் பாசம் வந்து விட்டது ,அவருக்கு என்னை அடையாளம் தெரிகிறது நான் வேலைக்கு போய் விட்டு வந்தால் வாய் லேசா சிரிக்கும் ,அந்த கண்ணில் பாசம் தெரியும் ,இவங்க வீட்டில் நான் இல்லாத போது இவர் மலம்,சிறுநீர் போய் அப்படியே கிடப்பதைப் பார்த்தால் இவரை அடிப்பார்கள் ,திரும்ப நான் போகும் போது அது சின்ன பிள்ளை போல எதோ அழுதுகிட்டே சொல்லறது மாதிரி செய்யும் அக்கா,அப்படியே என் மனசு உருகிப் போய் விடும் ,அதனால் தான் 3 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் அதைப் பார்த்து விட்டு சாப்பாடு தண்ணி குடுத்து விட்டு துடைத்து விட்டு விட்டு வருவேன் அக்கா அதுனால தான் இப்படி லேட்டா வருகிறேன் என்றார் ..
கேட்ட எனக்கு,எங்களுக்கு  மனம் ஆடிப் போய் விட்டது "
படிக்காத இந்த கிராமத்து மனுஷிக்குத் தான் எவ்வளவு பரந்த மனது ,தாலி கட்டி விட்ட ஒரே காரணத்திற்க்காக ஒரு காய்கறி நிலையில் இருக்கும் மனிதன் மேல் எவ்வளவு பாசம் ,பெற்ற தாயும் உடன் பிறந்த சொந்தங்களும் கூட கை விட்டு விட்ட நிலையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர் செய்யும் சேவை எனக்கு அவரை கை எடுத்துக் கும்பிடலாம் போல்தோன்றியது ,தெய்வம் மனித ரூபத்தில் வரும் என்று படித்திருக்கிறேன் ,அன்று பார்த்தேன் ..பொன்னம்மா வடிவில் ....###காசு ,பணம் ,நகை சொத்து ,அழகு ,பதவி என்று வெறி பிடித்து அலையும் மனிதர்கள் மத்தியிலும் இது போல் சிலர் வாழ்வதால் தான் உலக உருண்டை கடலுக்குள் மூழ்கி விடாமல் இருக்கிறது என்று எப்போதும் நினைத்துக் கொள்வேன் ......

Wednesday 31 July 2013

இன்று ஒரு உணவு அல்லது மருத்துவக் குறிப்புன்னு சொல்லிக் கொள்ளலாம் ...எல்லாம் நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ரேஞ்சுதான் ..வேறு ஒன்றும் இல்லை ..எல்லோருக்கும் இது பொருந்துமா என்றும் எனக்குத் தெரியவில்லை இருந்தாலும் அனைவரும் கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாருங்களேன் ....
1முழு நெல்லிக்காய் +1 சிறிய வெங்காயம் +1 பல் பூண்டு +2 டீஸ்பூன் அளவு கருவேப்பில்லை பொடி+1 டீ ஸ்பூன் வெந்தையப் பொடி +1 டீஸ்பூன் அளவு மிளகுத்தூள் +1 டீ ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் +2 or  3 டீ ஸ்பூன் அளவு தேன் கலந்து காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி ,காபி குடிக்கும் முன் சாப்பிட்டு வந்தால் சளி ,காய்ச்சல் ,மலச்சிக்கல் ,சில வகை தோற்று நோய்கள் நம்மை அவ்வளவு எளிதாக அண்டுவதில்லை ....##இது நானும் என் கணவரும் பயன் கண்ட விஷயம் ...கடந்த 9 மாதங்களாக பின்பற்றி வருகிறோம் ,என் கணவருக்கு அவரது ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து விட்டதாக சொல்லி அவர் 4 மாதங்களாக அதற்க்காக எடுத்து வந்த மாத்திரைகளை இங்குள்ள மருத்துவர்கள் நிறுத்தி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ......

Monday 29 July 2013


தோழியின்  தோழியிடமிருந்து பகிந்து கொண்ட விஷயம் ........சம்பந்தப்பட்ட இருவரின் நலம் கருதி பெயரும் ,ஊரும் வெளியிட வில்லை,அந்த ஆணும் பெண்ணும் முதலில் பள்ளியில் அறிமுகமாகி ,நட்பாகி பின்பு அது காதல் ஆனது ,காதல் கல்லூரி ,வேலை என்று இருவரும் இடம் மாறிய பின்பும் தொடர்ந்தது ,இரண்டு பேரின் வீட்டார் மட்டுமல்ல அவர்கள் இருந்த ஊருக்கே தெரியும் அவர்கள் இருவர் காதலிப்பதும் ,மனம் முடித்துக் கொள்ளப் போவதும்,..12 வருடங்கள் நன்கு பழகிய ,புரிந்த காதல் ,இருவரும் ஒருவழியாக தம் தம் வேலையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் மனம் முடிக்க நினைத்து ,அனைத்து ஏற்பாடுகளும் செய்து ,திருமண நாளும் வந்தது ,மணமகள் மேடையில் காத்திருக்க மணமகனைக் காணவில்லை ,அனைவரும் தேடி ஒருவழியாக மாலை நேரம் அவரை அவரது அலுவக கழிப்பறையில் ஒளிந்திருந்ததைக் கண்டு பிடித்தார்கள் ,காரணம் கேட்டதற்கு "என் அம்மாவிற்கு பெண்ணைப் பிடிக்கவில்லை ,அதனால் எனக்கு இந்தப் பெண்ணோடு கல்யாணம் வேண்டாம் "தோழி செய்தி கேட்டு நிலை குலைந்து போயிருந்தார் சில காலம் ,பின்பு தேறி தற்போது மிக தொலைவான நாட்டில் மிகப் பெரிய பதவியில் இருக்கிறார் ,திருமணம் செய்து கொள்ளவில்லை ,வயதும் கடந்து விட்டது ,அவரோ அவர் அம்மா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ,அந்த பெண்ணோ 2 வருடங்கள் கழித்து இவரைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விவாகரத்து பெற்றுக் கொண்டார் ,வேறு யாரும் இவருக்கு பெண்ண தர மறுத்ததால் அவர் அம்மாவோடு தனியாக வசிக்கிறார் அதே ஊரில் ....####இந்த நிகழ்வைக் கட்ட பின்பு எனக்குத் தோன்றியது "தெய்வம் நின்று கொல்லும் "என்பது இது தானோ ???

Thursday 25 July 2013

சமீபத்தில் மிகவும் பரபரப்பாக தமிழகத்தில் பேசப்பட்ட ,பாதித்த ஒரு நிகழ்வு -----
நான் சாதி,மதம்,இனம் ,காதலுக்கு எதிரி என்கிற நிலையில் இதை பகிரவில்லை ,என் கண்ணோட்டம் அந்த இரு பிள்ளைகளின் பெற்றோர் பற்றியதே ..எது காதல்?புரியாமல் புரிந்தார் போலும்,தெரியாமல் தெரிந்தார் போலும் நடந்து கொள்வதா?என்ன காரணம்?தற்போது வெளியிடப்படும் ஒரு சில கேவலமான சினிமாக் காட்சிகளா?தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கூட தற்போது நேரடியாகவே சில நடனக் காட்சிகளில் அதிக நெருக்கம் காண்பிப்பதா?எதில் இல்லை ஆபாசம்?இவை தான் காரணம் என்றால் இன்னும் எவ்வளவு காலம் அவர்களை மட்டும் குறை சொல்லி காலம் தள்ளுவார்கள்?ஏன்?தற்போதுள்ள பிள்ளைகள் எல்லோரும் நன்கு படிக்கிறார்கள் ,அதிகம் தெரிந்து கொள்கிறார்கள் அப்படி இருக்க இந்த விஷயத்தில் மட்டும் ஏன் இந்த அளவு அறியாமை?தற்கொலையும் ஆசிட் வீச்சும் எதற்கு தீர்வு?அந்த பையன் செய்தது தற்கொலையா?கொலையா?என்பது வேறு விஷயம் ,ஆனால் அந்த பையன் இறந்து போனதன் மூலம் ஒரு பெண்ணை உயிரோடு சாகடித்து விட்டு சென்று இருக்கிறான் என்று தான் சொல்ல முடியும் ,மனதில் அவன் மேல் முழு நம்பிக்கை இருந்ததால் முதலில் வீட்டை விட்டு வந்த பெண்ணிற்கு ,அதே நம்பிக்கை அந்த பையனிடம் மறுபடி கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அவன் எப்படி மறந்தான்?அப்படி என்றால் அவனுக்கு அவன் அன்பின் மேல் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம் ,தந்தையின் மறைவு அந்த பெண்ணை மிக பாதித்துள்ளது என்பதை  கண்கூடாகப் பார்த்தும்,உணர்ந்தும் இருந்த அந்த பையனுக்கு தானும் அதே போல் ஒரு தண்டனை அந்த பெண்ணுக்கு கொடுக்கிறோம் என்பது மறந்து போனது ஏனோ?இதுவும் ஒரு வகையில் ஒரு கொடூரப் பழி வாங்கல் என்று தான் சொல்ல முடிகிறது ....அவர்கள் இருவரது பெற்றோர் நிலை கண்டிப்பாக யாராலும் தேற்றி விட முடியாதிருக்கும் ,ஒரு பிள்ளை பெற்றது முதல் ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு கனவு,ஆசை,எதிர்பார்ப்பு பெற்றவர்களிடம் ..பிள்ளைகள் உடல் நலமில்லாமல் மறைந்து விட்டால் கூட கொஞ்ச நாளில் தேற்றிக் கொள்ளும் தாயின் மனம் இது போன்ற நிகழ்வுகளினால் வந்த இழப்பை எப்படி மறப்பது?மன்னிப்பது?பள்ளி பருவத்தில் காதலித்து பெற்றோர் எதிர்ப்பால் திருமணம் மறுத்து வெளிநாடு சென்று விட்டு அதே பெண்ணை அவளது 40வது வயதில் ,கான்செர் காரணமாக கர்ப்பப்பை நீக்கிய பின்பும் இந்திய வந்து மணந்து கொண்ட ஒரு ஆண் மகனை எனக்குத தெரியும்,கட்டிய மனைவி ஒரு மகனைப் பெற்றபின் பிரிந்து சென்று 7 வருடங்கள் கடந்தும் அந்த மனைவிக்காக காத்திருந்து மகனை வளர்த்த ஒரு இள வயது ஆடவனையும் தெரியும் ,இந்த வருடம் அந்த மனைவி அவள் கணவனோடும் குழந்தையோடும் வந்து சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் ...இவர்கள் செய்தது ,காத்திருந்தது எந்த நம்பிக்கையில்?இதன் பெயர் காதல் இல்லையா?
எனக்கு திருமணம் ஆகும் முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்த 2 வெவ்வேறு தம்பதிகள் சொன்ன அட்வைஸ் "'மறந்தும் காதல் திருமணம் மட்டும் செய்து கொள்ளாதே ,பெற்றோர்களைப் பகைத்து விட்டு ""

Tuesday 23 July 2013

நேற்று ஒரு இனிய  மறக்க முடியாத நிகழ்வு ..எனக்குத் தெரிந்த ஒரு தோழியைப் பார்க்க இங்குள்ள முதியோர்  இல்லம்   சென்று இருந்தேன்,அங்கு இருந்த  ஒரு சீனப் பாட்டி என்னை அருகில் வருமாறு அழைத்தார் "எனக்கு
 உன் தலை அலங்காரம் பிடித்துள்ளது ,எனக்கும் அது போல் செய்து விடுகிறாயா?என்றார் "சரி என்று பின்னல் போட்டு அதை மேல்நோக்கி கொண்டை போல் போட்டு விட்டேன் ,கண்ணாடியில் தன்னைப் பார்த்து விட்டு அந்தப் பாட்டிக்கு சந்தோசம்  தாங்க முடியவில்லை ,எனக்கு நன்றாக இருக்கிறதா  என்று என்னிடம் மட்டுமல்ல ,அங்கு இருந்த சக நண்பிகளிடம் கேட்டு விட்டு ,என்னிடம் நீ இங்கு எத்தனை மணி வரை     இருப்பாய்  என்று கேட்டார் ,சொன்னேன் ,"நான் ஏன் உன்னை எனக்கு தலை அலங்காரம் செய்ய சொன்னேன் தெரியுமா?என்நண்பன் என்னைப் பார்க்க  ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறான் ,அவன் வரும் போது,நான் அழகாக இருக்க வேண்டாமா?அதனால் தான்
என்றார் வெட்கத்தோடு ...பிறகு ஒரு 1 மணி நேரம் ஆகி இருக்கும் நான் வேறு ஒரு இடத்தில் என் தோழியோடு ,அதே இல்லத்தில் தான் இருந்த போது ,என் தோழியின் பெயரோடு என்னையும்  சேர்த்து வரச் சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்தார்கள் ,போனேன் அங்கு அந்தப் பாட்டி அவர் நண்பரிடம் என்னை அறிமுகம் செய்து விட்டு சொல்கிறார் "என்னை அழகாக்கியவள் "அதோடு அவரும் அந்த நண்பரோடும் என்னோடும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் "நான் உனக்கு நன்றி சொல்ல மாட்டேன் ,நீ உனக்கு எப்போவெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது என்னைப் பார்க்க வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ,சம்மதித்தேன் "மனம் முழுக்க நிறைவோடு ....:)

###உலகம் அழகாகத் தோன்றுவது கண்டிப்பாக அழகான மனம் கொண்ட மனிதர்களோடு வாழும் போது தான் என்று புரிகிறது .....
வீட்டில் ஒரு சிறு மனஸ்தாபம் ,சிலரைப் பிடிக்காமல் போகும் போது வேண்டுமென்றே முகம் கூட கழுவாமல் எதிர்கொள்பவர்கள் ,மிகச் சிறிய தலை வலியை கூட   பெரியதாக்கி பிரதாபிப்பவர்கள் மத்தியில் தான் மிக சிறிது காலம் தான் வாழப் போகிறோம் என்று தெரிந்தும் அந்தசிறு வயது முதல் பழகிய  நண்பர்  முன் இந்தப் பாட்டி தன்னை அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று முனைப்பெடுத்துக்  கொண்டது   என்னை மிகவும் யோசிக்கவும் ,கற்றுக் கொள்ளவும் வைத்தது .......  
   ,

Saturday 20 July 2013

செய்து பார்க்க ....

புரதச் சத்து மிகுந்த சோயா வடை;;;சோயா உருண்டைகள் 1 கப் + கொஞ்சம் கடலைப் பருப்பு +கொஞ்சம் பாசிப் பருப்பு +கொஞ்சம் துவரம் பருப்பு +2 பூண்டுப் பல் +மிக சிறிதளவு சோம்பு +4 அல்லது 5 மிளகாய் வத்தல்கள் +உப்பு +சிறிதளவு கறிவேப்பில்லை --இவை தேவையான பொருட்கள் செய்முறை ;;சோயா உருண்டைகளை மட்டும் தனிப் பாத்திரத்தில் போட்டு சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்துப் பின் ,நன்கு பிழிந்து விட்டு மறுபடி குளிர்ந்த நீரில் போட்டு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும் ,வடைக்கு சாதாரணமாக அரைப்பது போல் பருப்பு வகைகளை முதலில் அரைத்துக் கொண்டு பிறகு சோயா உருண்டைகளோடு ,பிற பொருட்களையும் சேர்த்து கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டு எண்ணையில் பொறித்து எடுக்கலாம் ...சுவையாக இருக்கும் ,சில பிள்ளைகள் சோயாவை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள் ,அவர்களுக்கு இது போல் செய்து கொடுக்கலாம் .....தயவு செய்து இரண்டு முறைகளுக்கு மேல் பயன் படுத்திய எண்ணையை பயன் படுத்த வேண்டாம் ,ஏனென்றால் அது யாருடைய உடல் நலத்திற்கும் நல்லதல்ல .....

Friday 19 July 2013

சிங்கப்பூருக்கு குடும்பத்தோடு குடி பெயர்ந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டது ,இதுவரை இப்படி ஒரு சம்பவம் இங்கு நடந்தது இல்லை ,பட்டப் பகலில் எல்லோர் முன்னிலையிலும் அப்பா ,மகன் என இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர் ,அப்பா தொழில் அதிபர் ,மகன் அரசாங்க வேலையில் இருப்பவர் ,வயது 42,சந்தேகத்தின் அடிப்படையில் பக்கத்து நாட்டுக்கு தப்பிச் சென்ற கொலையாளியை (?)இரண்டு நாட்களுக்குள் கைது செய்து விட்டார்கள் ,கொலை செய்யப் பட்டவர்களும் ,பிடிபட்டவரும் வேறு வேறு இன,மதத்தைச் சேர்ந்தவர்கள் ,பிடிபட்டுள்ளவர் மிகப் பெரிய நிலையிலுள்ள ஒரு காவல் அதிகாரி ,போன மாதம் அந்த கொலையுண்ட தொழில் அதிபரின் தொழிற்சாலையில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தை கையாண்ட காவல் அதிகாரி இவர் என்பதைத் தவிர இவர்களுக்குள் எந்த வித தொடர்பும் இல்லை ..ஏன் ,எதற்கு?என்கிற காரணம் தெரிய என்னோடு சேர்ந்து அனைவரும் ஆவலாக உள்ளனர் ,அமைதி காக்கின்றனர் ,இங்கு யாரும் இதனை தன் சுய லாபத்திற்காக
மக்களைதூண்டி விட்டு அந்த நெருப்பில் குளிர் காய வில்லை ,பொதுச் சொத்துக்கள் நாசமாகவில்லை,வேலை நிறுத்தம் இல்லை,அடுத்த இனத்தை வெட்டி சாய்க்க கிளம்பவில்லை "இன்று நான் உழைத்தால் ,நாளை என் பிள்ளைகள் உழைக்கும்,ஒற்றுமை காக்கும் என்கிற நல்ல எண்ணமும் ,உண்மை கண்டிப்பாக வெல்லும் என்கிற நம்பிக்கை ,கண்டிப்பாக அரசாங்கம்
உரிய.நடவடிக்கை எடுக்கும்" என்றும் சொல்லி அடுத்த வேலையைப் பார்க்க கிளம்புகின்றனர்....

Tuesday 16 July 2013

இந்த பதிவு கொஞ்சம் சிரிக்கவும் ,சற்று சிந்திக்கவும், செயற்படுத்தவும் மட்டுமே -- யாரையும் பழி சொல்வதோ ,குறிப்பிட்டோ சொல்லவில்லை ,எல்லோருக்கும் குழந்தைகள் உண்டு அவர்களிடம் இது போல் சொல்ல வேண்டாம் என்று ஒரூ சின்னவேண்டுதலோடு.ஏனென்றால் இது நான் .--- என் அப்பாவின் அப்பா (தாத்தா)விவசாயி,விஷகடி மருத்துவர் ,கோவில் பூசாரி அவரைப் பார்க்க எப்போதும் ஆட்கள் வீட்டுக்கு வந்த வண்ணம் இருப்பார்கள் ,அப்போது எனக்கு வயது 7,ஒரு பெரியவர் மிக கருப்பாய் மிக உயரமாய் ,மிக பருமனாய் பெரிய மீசை வைத்திருப்பார் ,அவர் கண்கள் எப்போதும் சிவப்பாக இருக்கும் ,வாயில் எப்போதும் வெற்றிலையும் ,புகையிலையும் போட்டு மென்று கொண்டே இருப்பார் ,அவர் என் தாத்தாவைப் பார்க்க அடிக்கடி வருவார் ,வரும் போதெல்லாம் என் கைபிடித்து இழுத்து தன பக்கம் வைத்து கொள்வார் ,நான் விடுபட திணறும் போது"உன்னை நான் தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் நாளைக்கு வந்து தூக்கிப் போய் விடப் போகிறேன் ,அப்போ என்ன செய்வாய்?"என்று கேட்டு சிரிப்பார் ,வீட்டில் எல்லோரும் நான் அப்போது அழுவதைப் பார்த்து சிரிப்பார்கள் ,என் அம்மா அப்படி எல்லாம் இல்லைடா,சும்மா விளையாட்டு என்று சொன்னாலும் நான் சமாதானம் அடைந்து விடுவதில்லை ,மிகவும் பயப் படுவேன் வீட்டில் நுழைந்தவுடன் அந்த தாத்தா என்னைத்தேடி வந்து விளையாட்டாக பயமுறுத்த ஆரம்பிப்பார் ,நான் அதனைத் தவிர்க்க தினமும் பல்வேறு யுக்திகளை யோசிப்பேன் ,ஒருநாள் எங்கள் வீட்டு நெற்க்குதிருக்குள் இறங்கி ஒளிந்து கொண்டேன் ,அவர் வீட்டை விட்டுப் போகும் வரை வெளிவரவில்லை ,அவரும் என் தாத்தாவோடு பேசிவிட்டு சென்று விட்டார் ,அடுத்த நாள் எனக்கு உடல் முழுவதும் சிவந்து தடிப்பு வந்துவிட்டது ,பிறகு கொஞ்ச நாட்கள் அவர் வரவில்லை பின்னர் அம்மா சொன்னார் அவர் இறந்து விட்டார் என்று ,கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது என்று கூட சொல்லலாம் ,ஆனால் என்னை அறியாமல் இன்று வரை யாராவது அவர் போல் கருப்பாக உயரமாக பருமனாக என் எதிரில் வந்தால் பயப்படுவேன் ,அவர்கள் இருக்கும் பக்கம் போக மாட்டேன்,அவர்களோடு பேசக்கூட பயப்படுகிறேன் ....என் பயம் கண்டு என் பிள்ளைகள் சிரிப்பார்கள் ,ஆனாலும் என் கையை இருக்கப் பற்றிக் கொள்வார்கள் புரிந்துணர்வோடு........:) :). நீங்களும் உங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள் ,கொஞ்சம் அவர்களது மனநிலைக்கு மதிப்பளியுங்கள் ......

Sunday 14 July 2013

எனக்குத் தெரிந்த பேச்சி...உண்மை சம்பவம் ..பெயரும் ஊரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .... பேச்சி என்னிடம் வீட்டு வேலைக்கு என்று வரும் பொது வயது 15 இருக்கும்,தான் ஆபத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும் படி என் தம்பியை கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவன் திருச்சியில் இருந்த என் வீட்டுக்கு அழைத்து வந்தான் ,மிகவும் பரிதாபகரமாக இருந்தது அவள் தோற்றமும்,கதையும் .."அப்பாவும் அம்மாவும் வேற்று சாதியை சார்ந்தவர்கள் ,காதலித்து திருமணம் செய்து கொண்டுவேற்று ஊரில் வாழ்ந்து கொண்டு இருந்தவர்களை ,அந்த இரு சாதியினை சார்ந்தவர்களும் கண்டுபிடித்து வெட்டிப் போட்டு விட்டதால் பேச்சி அநாதை இல்லத்தில் விடப்பட்டாள் 1 வயதில்,அவளுக்கு 7 வயது ஆன போது,அந்த அநாதை இல்லத்திற்கு பரிசோதிக்க வரும் மருத்துவர் தன வீட்டில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று தன்னோடு இவளை அழைத்து சென்று வைத்துள்ளார் ,பிறகு அவரது முதல் பெண் திருமணம் ஆனவுடன் அவர் வீட்டில் வேலை செய்ய மதுரைக்கு அனுப்பி விட்டார்,அங்கோ மருமகன் அவர் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பேச்சியை பாலியலுக்கு உட்படுத்த தொல்லை கொடுத்து இருக்கிறார் ,இதற்கும் அந்த மருமகன் மிக பிரபலமான ஒரு தமிழ் நாளிதளின் நிருபர் , இந்தப் பெண் அவர் குளிக்கும் போது வெளியிலிருந்து தாழ்பாள் போட்டு விட்டு அருகிலிருந்த டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த என் தம்பியின் காலில் விழுந்து அழவும் ,உடனே அவன் அழைத்து வந்திருந்தான் ..என்ன ஒரு கொடுமை....அநாதை என்றவுடன் நாம் தான் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறோம் ???என் வீட்டில் பேச்சி 3 வருடங்கள் சந்தோசமாக குடும்பத்தில் ஒருத்தியாக ,என் இரு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல ஒரு துணையாக இருந்தால்..நான் இங்கு வரும் வரை.... தற்போது பேச்சி திருமணம் முடிந்து 2 குழந்தைகளின் தாய் ,கோயம்புத்தூரில் வசித்து வருகிறாள்.....கடந்த வருடம் விடுமுறைக்கு இந்தியா சென்ற போது பேச்சி சொன்னது "தற்போது நான் ஒரு அநாதை விடுதியில் வேலை செய்கிறேன் அக்கா,அனாதைக்கு எப்போதும் அநாதை இல்லம் தான் அடைக்கலம் கொடுக்கும் போல அக்கா ,இங்கு வரும் போது நான் நிறைய சொந்தங்களோடு இருப்பதாக உணர்கிறேன் அக்கா "எனக்கு வெளியில் வேலை வேண்டாம் அக்கா....இதில் வரும் வருமானம் போதும் அக்கா.." மன நிறைவு என்பது மிக பெரிய கொடுப்பினை தானே???அவளது சந்தோஷத்தைக் கெடுக்க மனம் இல்லாமல் ,இங்கு வந்து சேர்ந்தேன்.....நான் மனம் முழுக்க குறைகளோடு ....

Saturday 13 July 2013

வாழ்க்கையில் எது தேவை ,முக்கியம் என்பது இன்று வரை புரியாமல் தான் எல்லோரும் வாழ்ந்து வருகிறோம் ,ஒரு கான்செர் நோயாளியின் இறுதி கால கட்டத்தை உடன் இருந்து பார்த்தோமானால் என்ன தேவை என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும்,அனுபவ உண்மை,....எல்ல்லா உணவுப் பண்டங்களையும் அவர்களால்,பார்க்க மட்டுமே முடியும் ,ஆசைப் பட மட்டுமே முடியும் ஒரு கால கட்டத்தில் யாரையும் அறிந்து கொள்ள முடியாமல்,பேச முடியாமல் ,வெறும் வெற்றுப் பார்வை மட்டும் பார்த்தபடி மரணிப்பது என்பது மிகக் கொடுமை ,எதிரிக்கு கூட வரக் கூடாது என்று தான் எல்லோரும் நினைப்போம் ...எல்லோரையும் மன்னிப்போம் ,முடிந்த வரை நெருங்கி பழகி கஷ்டம் வளர்ப்பதை விட கொஞ்சம் தள்ளி நின்று என்றும் துணை இருப்போம் ...எல்லோரோடும் ...நம் வாழ் நாள் இறுதி வரை...இது தான் எனக்கு நான் செய்து கொண்ட உறுதி மொழி... ... ,

Wednesday 10 July 2013

எல்லா வர்ணங்களும் கலைந்த பின்பும் முழு வெள்ளையாய்க் காத்திருப்பது உன் -உன் கை விரல்கள் தொட்டு எழுதப் போகும் வண்ணத்திற்காக மட்டுமே .....

Tuesday 9 July 2013

-பட்டுப் புடவையை -ஸ்பரிசிக்கையில் கூடவே --என்றோ மரித்த அம்மாவின் வாசமும் ,நினைவும் காலம் மிகச் சிறந்த நண்பன் --அறிவிற்கு மிகக் கொடூரமான எதிரி --மனதிற்கு ..
எனக்கு ஒரு சந்தேகம் ,எதற்க்காக சிலர் வேண்டி வேண்டி நண்பர்கள் வட்டத்தில் சேர அழைப்பு விடுப்பார்கள்? பிறகு சிறிது காலம் கழித்து எனக்கு 1000 நண்பர்களுக்கு மேல் சேர்ந்து விட்டார்கள் ,அதனால் சிலரை அதாவது யார் எல்லாம் லைக் போடா வில்லையோ அவர்களை எல்லாம் நீக்கி விடப் போகிறேன் என்று அலட்டிக் கொள்வார்கள்?