Monday, 5 August 2013
இங்கு கடந்த வாரம் நடந்த நிகழ்வு ----இங்குள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி (பெண்கள்) மாணவிகள் இருவர் பள்ளிக்கு மொட்டைத் தலையோடு வந்ததால் பள்ளி ஆசிரியர் அவர்களை வகுப்பிற்குள் அனுமதிக்க மறுத்து அலுவலக அறையில் இரண்டு வகுப்புகள் முடியும் வரை அமர வைத்து விட்டார் ,பின்பு பள்ளியின் பிற மாணவிகள் அனைவரும் சேர்ந்து பணம் போட்டு ,அவர்கள் இருவர்க்கும் விக் வாங்கித்தந்தனர் ,அதன் பிறகு அவர்கள் வகுப்பிற்கு சென்றனர் ...இதுதான் செய்தி நடந்தது என்னவென்றால் கடந்த சனிக்கிழமை அன்று இங்குள்ள சில பள்ளி மாணவிகள் கான்செர் விழிப்புணர்வு இயக்கத்தில் கலந்து கொண்டு அவர்கள் தங்கள் தலை முடியை மழித்துக் கொண்டனர் ,இந்த பெண்கள் பள்ளி மாணவிகள் அந்த இயக்கத்தில் தாங்களாகவே கலந்து கொண்டு ஆசிரியரிடம் தலை முடியை மழித்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளனர் ,ஆசிரியர் விக் வைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவதாக இருந்தால் செய்துகொள்ளலாம் என்று அனுமதி வழங்கி உள்ளார் ,எனெற்றால் அந்த பள்ளியில் அதற்க்கு (மொட்டைத் தலைக்கு) அனுமதி இல்லை ,இவர்களும் சம்மதித்துள்ளனர் ,5 மாணவிகள் தலை முடியை மழித்துக் கொண்டதில் இவர்கள் இருவர் மட்டும் விக் அணியாமல் பள்ளி வந்தது தான் பிரச்சனை ஆகி விட்டது ,மாணவிகள் விக் அணிந்தால் தலையில் அரிப்பு வந்து விடுகிறதுஎன்று சொல்கிறார்கள் ,அதற்க்கு ஆசிரியர் அப்படியென்றால் நீங்கள் மருத்துவரிடம் அதற்க்கான சான்றிதல் வாங்க வேண்டும் என்கிறார் ,பல தரப்பட்ட கருத்துகள் ,சிலர் இது ஒரு நல்ல விஷயம் தானே இதற்க்கு இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா?என்கிறார்கள் ,சிலர் மாணவிகள் முதலில் சத்தியம் செய்து உள்ளனர் ஆசிரியரிடம் அதனைக் காப்பாற்ற வேண்டும் என்றும்,சிலர் பள்ளி மாணவிகள் இது போல் விஷயங்களில் பள்ளிப் படிப்பை முடித்த பின் செய்ய வேண்டும் என்றும்,இறுதியில் இங்குள்ள கல்வி அமைச்சு "மாணவிகள் அவர்கள் தம் பள்ளிக் கொள்கைகளையும் ,சட்ட திட்டங்களையும் மதித்து பின்பற்ற வேண்டும் "என்று அறிவுறுத்தி உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment