Tuesday, 13 August 2013

இன்று நானும் என் பெண்ணும் வெளில் சென்று இருந்து இருந்தோம்,என் பெண் பஸ் தற்போது எங்கு வந்து கொண்டு இருக்கிறது ,எங்கள் நிறுத்தத்திற்கு எப்போது வரும் என்று தன்மொபைல் IRIS வழி செக் பண்ணியது ,வர சிறு நேரம் ஆகும் அதாவது ஒரு 10 டு 13 minutes என்றவுடன் ,உடனே OMG ...so  late ..why  this  sbs transit  services are  nowadys  poor ??என்று உடனே tweet செய்ய துவங்கி விட்டது??இதுதான் தற்போதைய பிள்ளைகள் ,அவர்கள் வளரும் சூழ்நிலை அப்படி அதனால் அவர்களை நாம் குறை கூற முடியாது ,எனக்கு என் கல்லூரி காலம் நினைவுக்கு வந்தது ,அப்போது காலையில் 8 மணிக்கு பஸ் பிடித்தால் தான் 9 மணிக்குள் collegekkul நுழைய முடியும் ,இல்லையென்றால் ஒருபெரிய கும்பல் சேர்ந்து மிகவும் கஷ்டமாக ஆகிவிடும்,மொத்தமாக மதுரையின் அனைத்து கல்லூரி பிள்ளைகளும் கோரிப்பாளையம் வந்துதான் மாறவேண்டும் ,அப்போதெல்லாம் இப்போது உள்ளது போல் ஆட்டோக்கள் கிடையாது,fatimacollege ,ldc ,meenakshicollege ,yaadhava ,mannarcollege ,lawcollege ,medical  college ,madurai  college ,என்று அனைத்து students +professors என்று ஒரு பெரிய திருவிழா போல் இருக்கும் அப்போது ,நீந்திப் போவதற்குள் ஒரு பெரிய சாதனையாக இருக்கும் எங்களுக்கு ,கல்லூரிக்குள் நுழையும் போது,எதோ ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று விட்டது போல்தான் போவோம்,(அவ்வளவு வேர்த்து,களைத்து)..எங்கள் பஸ் கண்டக்டர் வேறு ரொம்ப அடாவடி பண்ணுவார்,அவருக்கு பிடித்த பெண் எங்கள் ஸ்டாப்பில் நிற்க வில்லை என்றால் உடனே doublewhistle கொடுத்து விடுவார்,அவ்வளவுதான் பஸ் அங்கு நிற்காது ,complaint  கொடுப்போம் ,உடனே அடுத்த நாள் மட்டும் எவ்வளவு மெதுவாக ஒட்டிச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாக ஒட்டிச் செல்வார்,இல்லையென்றால் வேண்டுமென்றே பஸ் நிறுத்தம் தள்ளி நிறுத்தி எங்கள் அனைவரையும் ஓடிவந்து ஏறும்படி செய்வார்,இந்த பிரச்சனையை சமாளிக்க அந்த பெண்ணை தாஜா செய்து வைத்துக் கொள்வோம்,அந்த அக்காவின் bagai நாங்கள் வாங்கி வைத்துக் கொள்வது ,அவங்க உட்கார வழி செய்வது,sweet  வாங்கி கொடுப்பது ,எப்போது லீவ் என்று கேட்டு வைத்துக் கொண்டு அன்று மட்டும் போகும் பஸ்சில் ஏறி திரும்ப அதே ரூட்டில் காலேஜ் போவது??வேறு வழி???என்ன ஒரு ஆறுதலான விஷயம் முன்பு இப்போது இருப்பது போல் விஷமிகள் இல்லை,எல்லோரும் கொஞ்சம் வீட்டுக்கு பயந்தும்,படிக்க வேண்டும் என்கிற ஒரு முனைப்போடும் இருந்தகாலம்,ஓரளவிற்கு எல்லோரும் உணமையான நட்போடு,ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட காலம் ......##இப்போது எல்லோரும்  கொஞ்சம் பணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் அதனாலோ என்னவோ இருபாலாரும்  ஒருவித உள்நோக்கம் கொண்ட நட்போடு தான் பழகுகிறார்கள் ...பிள்ளைகளையும் குற்றம் சொல்ல முடியாது அவர்கள் இருக்கும் உலகம்,அவர்களை சுற்றி நடக்கும் விஷயம் அப்படி....மதம்,இனம்,மொழி ,ஊர்,சாதி என்று எல்லாவழிகளிலும் ஒருமிகைப் படுத்தல் தற்போதுள்ள இளையர்களிடம் திணிக்கப் படுகிறது ...அதன் விளைவு ..ஒரு நிலையற்ற மனம்,நிலையற்ற தன்மை,தவறு என்று தெரிந்தாலும் அதையும் எதோ ஒரு வகையில்  ஒப்பீடு செய்து கொண்டு அதன் வழி செல்கிறார்கள் ......##வினை விதைத்தால் வினை தானே அறுவடை செய்யவும் முடியும்??

No comments:

Post a Comment