Monday, 12 August 2013

இன்று என் சீன நண்பரும் அவரது துணைவியாரையும் சந்திக்க நேர்ந்தது ,பேசிக் கொண்டே இருந்த போது விடுமுறை காலம் பற்றி பேச்சு வந்தது அவர்கள் இருவரும் எப்போதும் விடுமுறைக்கு இந்தியா செல்பவர்கள் ,அங்கு அவர்களுக்கு தாஜ்மஹால் மிகப் பிடித்த இடம் ,சில உணவு வகைகள் மிகப் பிடிக்கும் ,இம்முறை எங்கு என்றேன் ,சில நொடிகள் என்னைப் பார்த்து விட்டு சொன்னார் ,நாங்கள் இம்முறை இந்திய செல்வதற்காக என்று டிக்கெட் புக் பண்ணி வைத்ததை கான்செல் பண்ணி விட்டோம் ,அங்கு நடக்கும் rape cases என் மனைவியை மிகவும் பயமுறித்தி விட்டது ,இது போல் நாங்கள் மட்டுமல்ல எங்கள் குழுவில் உள்ள 10 பேரும் பதிவை கான்செல் பண்ணி விட்டு பதிலாக ஹாங்காங் போகிறோம் என்றார்,என் அங்கு இன்னும் அந்த நபரை தண்டிக்கவில்லை?குற்றம் இன்னும் அங்கு நிரூபிக்க படவில்லையா?என்றும் கேட்டார் ,இங்கெல்லாம் ஒரு நபர் குற்றவாளி என்று நிரூபிக்க பட்ட உடன் அவருக்குரிய தண்டனை நிறைவேற்றப் பட்டு விடும் ,அங்கு எதனால் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அவர்கள் தண்டிக்கப் படவில்லை??உண்மையில் எனக்கு இதற்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரிய வில்லை ,இது போல் சில நேரடிக் கேள்விகள் வரும் போது வெட்கத்தோடு தலை குனிவது அல்லது அமைதியாக இருப்பதைத் தவிர என்ன என்னால்/நம்மால் செய்து விட முடியும்????
நமக்குத் தெரியும் எய்தவன் எங்கோ இருக்க அம்பை நொந்து என்ன பயன்??அவர்களுக்கு விளக்கம் சொல்வதற்கு பதில் அமைதி காப்பது இந்த இடத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்குத் தோன்றியது .....

No comments:

Post a Comment